CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Tuesday 24 October 2017

Manam Yennum Mayakkannadi - Article No. 1 (Tamil)

குடிப்பழக்கம், தற்கொலை எண்ணங்கள், அதித பயம், இனம்புரியாத கவலை, கோபம், பதற்றம், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் அடிக்ஷன் என மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது ‘மைண்ட் ஜோன்’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் சுனில்குமார் மற்றும் மனநல மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் ‘மனம் எனும் மாயக்கண்ணாடி’யை நமக்குக் காட்டப் போகிறார்கள்.
சண்முகத்தின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் ஒரு குக்கிராமம். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடனே படித்தான். கல்லூரியின் கடைசி ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையின் மிக முக்கியமான ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் இங்கு படம் நிறைவு பெற வேண்டும். ஆனால், இங்குதான் ஆரம்பித்தது.
முதல் மாதம் மிக அற்புதமான காலகட்டம். மனதில் தெரிந்ததெல்லாமே அந்த பல இலக்க சம்பளமும் ஊரில் அம்மா அப்பாவின் கவுரவமான மகிழ்ச்சியும் மட்டுமே. பிறகு அலுவலகத்தில் முதல் ப்ரெசன்டேஷன் வருகிறது. சண்முகத்துக்குப் பதற்றமும் அதிகரிக்கிறது. அதை மட்டுப்படுத்திக்கொண்டு அவன் எல்லோர் முன்பும் ப்ரெசன்ட் செய்ய அவனது ஆங்கிலப் பரிச்சியமின்மை அவனைத் தடுமாறச் செய்கிறது. எல்லோர் முன்பும் வியர்த்துப்போய் நிற்க, அவனது அணித் தலைவர் கண்ணாடி அறையினுள் அழைத்து சென்று , ‘தம்பி... முதல் முயற்சி... உன் தடுமாற்றம் புரிகிறது. ஆனால், அடுத்த வாரம் மீண்டும் ஒரு ப்ரெசன்டேஷன் உள்ளது. அதை நீங்கள் மிக சரியாக ப்ரெசன்ட் செய்ய வேண்டும். மும்பையிலிருந்து கம்பெனி சி.ஈ.ஓ. வருகிறார்’ என்று சொல்கிறார்.

மறுவாரம். சண்முகம் பெருமுயற்சி செய்தும் அவனால் நினைத்தது போல் ப்ரெசன்ட் செய்ய முடியவில்லை. மஞ்சப்பை, ட்ரங்குப் பெட்டி என்று கிண்டலும் அவமானமும் அவனைத் துரத்தி அடித்தன. தனியாக யோசிக்கும்போது இந்த வேலை தனக்கானது தானா என்ற பயம் வந்தது. ஆனால், அது இல்லாவிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பும் அம்மா அப்பாவின் கனவு தகர்ந்து போகும் வாய்ப்பும், கனவுகள் மெய்ப்பிக்கப்படாமல் போகும் வலியும் அதீதமானது.
நண்பரின் ஆலோசனைப்படி அவர் ஒரு மனநல வைத்தியரைப் பார்த்து இந்தச் சங்கடத்தை மீட்டெடுப்பது பற்றி கேட்க அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்திருக்கிறார். அதை அடுத்த ப்ரெசன்டேஷனுக்கு முன்னே அவன் சாப்பிட ஓரளவு தைரியமாய் பேச முடிந்திருக்கிறது.
அப்படி ஆரம்பித்த வழக்கம்தான். இன்று ஒரு நாளைக்கு பதினைந்து மாத்திரைகள் சாப்பிடும் நிலையில் அவர் இருக்கிறார். மனம் பதற்றமாக இருக்கும்போதெல்லாம் சாப்பிடத் தோன்றி, காதலைச் சொல்லக்கூட மாத்திரையைச் சாப்பிட்ட பிறகே சொல்ல முடிந்திருக்கிறது.
இந்த நவீன உலகம் ஒருபுறம் திறமை என்று நிர்ணயித்த கோட்பாடுகளை அளவீடாகக்கொண்டு தனித்திறனை நாம் மதிப்பீடுகளை உருவாக்குகிறோம். அதுதான் நம் பொருளாதாரத்தை, நாம் பணிபுரியும் இடங்களில் தீர்மானிக்கிறது. அது மறைமுகமாகத் தரும் அழுத்தத்தை நாம் உணர்வதே இல்லை. உணர்ந்தாலும் புறந்தள்ள நிர்பந்திக்கிறது புற சமூகம். அக சமூகமோ அதனாலேயே அதை ஒப்புக்கொள்ள யோசிக்கிறது.

இத்தகைய பணியிட மன அழுத்தங்கள் நம்மில் பலருக்கு உண்டு. எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே அதுவும் இந்தக் காற்று, நதியைப் போல ஆகிவிட்டது. ஸ்ட்ரெஸ் என்பது புழக்கத்தில் இருக்கும் சாதாரண வார்த்தையாகி, பரவி, இப்போது டிப்ரஷன் என்பது சகஜமான வார்த்தையாகி விட்டது. அதேநேரம் அது போகும் போக்கில் சொல்லி விட்டுப்போன வார்த்தையாக மாறி விட்டது.
உடலுக்குச் சுகமில்லாதபோது சிகிச்சைகள் எடுப்பதுபோல மனதுக்கு சுகமில்லாதபோது சிகிச்சை நிச்சயம் தேவை. இன்று அக்டோபர் 10 உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதைக் கொண்டு இந்த ஆண்டை பணியிடத்து மன அழுத்தங்களை நீக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. எனவே, வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா நிறுவனங்களும் தங்கள் பணியாளர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கவலைப்படுகிறதா?
நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் எல்லா நிறுவனங்களுக்கும் மிக முக்கிய தேவை, தனது பொருளாதார முன்னேற்றமாக இருப்பதையே நாமும் மறைமுகமாக அறிந்திருக்கிறோம். ஆனால், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவரப்படி பணியாளர்களின் மன ஆரோக்கியமின்மை நிறுவனத்தின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் அதை சரி செய்ய நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் பணம் செலவழித்து பணியாளர்களுக்கு மனநல ஆலோசனையைக் கொடுத்தால் தனது பொருளாதார இழப்பை சரி செய்வதோடு அதேபோல் நான்கு சதவிகித லாபத்தையும் ஈட்ட இயலுமெனவும் வழி சொல்கிறது.

ஆனால், நிஜத்தில் அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட பணியாளரை எப்படி நம் நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதற்கு ஆஷிஷின் கதையே உதாரணம். ஆஷிஷ் அழகான இளைஞன். ஆனால், அவனும் பணியிடத்து அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதம் அனுமதிக்கப்படுகிறான். பின்னால் விடுமுறை காரணமாக மனநல மருத்துவமனை தந்த விடுமுறை சீட்டை கொடுக்கும்போது நிர்வாகம் அதிர்கிறது. மீண்டும் போய் அதே மனநல மருத்துவரிடம் போய் தான் பணி செய்ய ஏற்ற நிலையில்தான் இருப்பதாக எழுதி வாங்கி வர சொல்கிறது. கூடவே இரு சட்ட திட்டங்கள். ஒன்று, அவன் அந்த அலுவலகக் கட்டடத்திலிருந்து குதிக்க மாட்டான் என்ற உறுதிமொழி. மற்றொன்று அவன் யாரையும் கொலை செய்துவிட மாட்டான் என்ற உத்திரவாதம். இதை எந்த மருத்துவரால் கொடுக்க இயலும்?
இப்படி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதென தெரியும்போது ஒரு நிறுவனம் அந்த ஊழியரை கொலை செய்யக்கூடியவராக பார்ப்பதே மனித உரிமை மீறல். அலுவலகப் பாதுகாப்பு என்பது பணியாளர்களின் மகிழ்ச்சியை மீறி இருக்கும்பட்சத்தில் அங்குள்ள ஊழியர்கள் வெறும் மெஷினாகவே பாவிக்கப்படுவார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரால் ஒருபோதும் கூர்ந்து வேலை செய்ய இயலாது. எல்லோருடனும் குழுவாகச் சேர்ந்து பணியாற்ற இயலாது. அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள். பணி தேங்கும். இங்குள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத் துறை என்பது சம்பள உயர்வை மட்டும் கவனிக்கும் துறையாகவே உள்ளது. தனிப்பட்ட பணியாளர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்கப்படுவதேயில்லை.
இன்றைய நவீன உலகம் காதற்ற ஓர் இயந்திரம். இந்த மனநல நாளில் இதற்கு குறிப்பாக அலுவலகம் சார்ந்த சமூகத்துக்குக் காதுகளைப் பொருத்தி பகிர்தலைத் தூண்டி அதன் மூலம் ஒரு சமூகம் மனமகிழ்ச்சியை அனுபவிக்க உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தொடர் ‘மனம் என்னும் மாயக்கண்ணாடி’யில் தங்கள் பிம்பங்களைச் சிதைத்துக் கொண்டவர்களின், சிதைந்ததாய் கருதி பார்ப்பவர்களின் வாக்குமூலமாக இருக்கப்போகிறது.

Dr. Sunil Kumar                                                              Dr. Jayasudha Kamaraj
Clinical psychologist                                                       counselling psychologist
Founder - Mind Zone                                                       co-founder, Mind Zone

psychology article in tamil part 1

மனம் என்னும் மாயக்கண்ணாடி!

டாக்டர் சுனில்குமார் - டாக்டர் ஜெயசுதா காமராஜ்
குடிப்பழக்கம், தற்கொலை எண்ணங்கள், அதித பயம், இனம்புரியாத கவலை, கோபம், பதற்றம், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் அடிக்ஷன் என மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது ‘மைண்ட் ஜோன்’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் சுனில்குமார் மற்றும் மனநல மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் ‘மனம் எனும் மாயக்கண்ணாடி’யை நமக்குக் காட்டப் போகிறார்கள்.
சண்முகத்தின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் ஒரு குக்கிராமம். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடனே படித்தான். கல்லூரியின் கடைசி ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையின் மிக முக்கியமான ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் இங்கு படம் நிறைவு பெற வேண்டும். ஆனால், இங்குதான் ஆரம்பித்தது.
முதல் மாதம் மிக அற்புதமான காலகட்டம். மனதில் தெரிந்ததெல்லாமே அந்த பல இலக்க சம்பளமும் ஊரில் அம்மா அப்பாவின் கவுரவமான மகிழ்ச்சியும் மட்டுமே. பிறகு அலுவலகத்தில் முதல் ப்ரெசன்டேஷன் வருகிறது. சண்முகத்துக்குப் பதற்றமும் அதிகரிக்கிறது. அதை மட்டுப்படுத்திக்கொண்டு அவன் எல்லோர் முன்பும் ப்ரெசன்ட் செய்ய அவனது ஆங்கிலப் பரிச்சியமின்மை அவனைத் தடுமாறச் செய்கிறது. எல்லோர் முன்பும் வியர்த்துப்போய் நிற்க, அவனது அணித் தலைவர் கண்ணாடி அறையினுள் அழைத்து சென்று , ‘தம்பி... முதல் முயற்சி... உன் தடுமாற்றம் புரிகிறது. ஆனால், அடுத்த வாரம் மீண்டும் ஒரு ப்ரெசன்டேஷன் உள்ளது. அதை நீங்கள் மிக சரியாக ப்ரெசன்ட் செய்ய வேண்டும். மும்பையிலிருந்து கம்பெனி சி.ஈ.ஓ. வருகிறார்’ என்று சொல்கிறார்.
மறுவாரம். சண்முகம் பெருமுயற்சி செய்தும் அவனால் நினைத்தது போல் ப்ரெசன்ட் செய்ய முடியவில்லை. மஞ்சப்பை, ட்ரங்குப் பெட்டி என்று கிண்டலும் அவமானமும் அவனைத் துரத்தி அடித்தன. தனியாக யோசிக்கும்போது இந்த வேலை தனக்கானது தானா என்ற பயம் வந்தது. ஆனால், அது இல்லாவிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பும் அம்மா அப்பாவின் கனவு தகர்ந்து போகும் வாய்ப்பும், கனவுகள் மெய்ப்பிக்கப்படாமல் போகும் வலியும் அதீதமானது.
நண்பரின் ஆலோசனைப்படி அவர் ஒரு மனநல வைத்தியரைப் பார்த்து இந்தச் சங்கடத்தை மீட்டெடுப்பது பற்றி கேட்க அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்திருக்கிறார். அதை அடுத்த ப்ரெசன்டேஷனுக்கு முன்னே அவன் சாப்பிட ஓரளவு தைரியமாய் பேச முடிந்திருக்கிறது.
அப்படி ஆரம்பித்த வழக்கம்தான். இன்று ஒரு நாளைக்கு பதினைந்து மாத்திரைகள் சாப்பிடும் நிலையில் அவர் இருக்கிறார். மனம் பதற்றமாக இருக்கும்போதெல்லாம் சாப்பிடத் தோன்றி, காதலைச் சொல்லக்கூட மாத்திரையைச் சாப்பிட்ட பிறகே சொல்ல முடிந்திருக்கிறது.
இந்த நவீன உலகம் ஒருபுறம் திறமை என்று நிர்ணயித்த கோட்பாடுகளை அளவீடாகக்கொண்டு தனித்திறனை நாம் மதிப்பீடுகளை உருவாக்குகிறோம். அதுதான் நம் பொருளாதாரத்தை, நாம் பணிபுரியும் இடங்களில் தீர்மானிக்கிறது. அது மறைமுகமாகத் தரும் அழுத்தத்தை நாம் உணர்வதே இல்லை. உணர்ந்தாலும் புறந்தள்ள நிர்பந்திக்கிறது புற சமூகம். அக சமூகமோ அதனாலேயே அதை ஒப்புக்கொள்ள யோசிக்கிறது.
இத்தகைய பணியிட மன அழுத்தங்கள் நம்மில் பலருக்கு உண்டு. எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே அதுவும் இந்தக் காற்று, நதியைப் போல ஆகிவிட்டது. ஸ்ட்ரெஸ் என்பது புழக்கத்தில் இருக்கும் சாதாரண வார்த்தையாகி, பரவி, இப்போது டிப்ரஷன் என்பது சகஜமான வார்த்தையாகி விட்டது. அதேநேரம் அது போகும் போக்கில் சொல்லி விட்டுப்போன வார்த்தையாக மாறி விட்டது.
உடலுக்குச் சுகமில்லாதபோது சிகிச்சைகள் எடுப்பதுபோல மனதுக்கு சுகமில்லாதபோது சிகிச்சை நிச்சயம் தேவை. இன்று அக்டோபர் 10 உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதைக் கொண்டு இந்த ஆண்டை பணியிடத்து மன அழுத்தங்களை நீக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. எனவே, வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா நிறுவனங்களும் தங்கள் பணியாளர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கவலைப்படுகிறதா?
நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் எல்லா நிறுவனங்களுக்கும் மிக முக்கிய தேவை, தனது பொருளாதார முன்னேற்றமாக இருப்பதையே நாமும் மறைமுகமாக அறிந்திருக்கிறோம். ஆனால், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவரப்படி பணியாளர்களின் மன ஆரோக்கியமின்மை நிறுவனத்தின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் அதை சரி செய்ய நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் பணம் செலவழித்து பணியாளர்களுக்கு மனநல ஆலோசனையைக் கொடுத்தால் தனது பொருளாதார இழப்பை சரி செய்வதோடு அதேபோல் நான்கு சதவிகித லாபத்தையும் ஈட்ட இயலுமெனவும் வழி சொல்கிறது.
ஆனால், நிஜத்தில் அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட பணியாளரை எப்படி நம் நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதற்கு ஆஷிஷின் கதையே உதாரணம். ஆஷிஷ் அழகான இளைஞன். ஆனால், அவனும் பணியிடத்து அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதம் அனுமதிக்கப்படுகிறான். பின்னால் விடுமுறை காரணமாக மனநல மருத்துவமனை தந்த விடுமுறை சீட்டை கொடுக்கும்போது நிர்வாகம் அதிர்கிறது. மீண்டும் போய் அதே மனநல மருத்துவரிடம் போய் தான் பணி செய்ய ஏற்ற நிலையில்தான் இருப்பதாக எழுதி வாங்கி வர சொல்கிறது. கூடவே இரு சட்ட திட்டங்கள். ஒன்று, அவன் அந்த அலுவலகக் கட்டடத்திலிருந்து குதிக்க மாட்டான் என்ற உறுதிமொழி. மற்றொன்று அவன் யாரையும் கொலை செய்துவிட மாட்டான் என்ற உத்திரவாதம். இதை எந்த மருத்துவரால் கொடுக்க இயலும்?
இப்படி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதென தெரியும்போது ஒரு நிறுவனம் அந்த ஊழியரை கொலை செய்யக்கூடியவராக பார்ப்பதே மனித உரிமை மீறல். அலுவலகப் பாதுகாப்பு என்பது பணியாளர்களின் மகிழ்ச்சியை மீறி இருக்கும்பட்சத்தில் அங்குள்ள ஊழியர்கள் வெறும் மெஷினாகவே பாவிக்கப்படுவார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரால் ஒருபோதும் கூர்ந்து வேலை செய்ய இயலாது. எல்லோருடனும் குழுவாகச் சேர்ந்து பணியாற்ற இயலாது. அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள். பணி தேங்கும். இங்குள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத் துறை என்பது சம்பள உயர்வை மட்டும் கவனிக்கும் துறையாகவே உள்ளது. தனிப்பட்ட பணியாளர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்கப்படுவதேயில்லை.
இன்றைய நவீன உலகம் காதற்ற ஓர் இயந்திரம். இந்த மனநல நாளில் இதற்கு குறிப்பாக அலுவலகம் சார்ந்த சமூகத்துக்குக் காதுகளைப் பொருத்தி பகிர்தலைத் தூண்டி அதன் மூலம் ஒரு சமூகம் மனமகிழ்ச்சியை அனுபவிக்க உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தொடர் ‘மனம் என்னும் மாயக்கண்ணாடி’யில் தங்கள் பிம்பங்களைச் சிதைத்துக் கொண்டவர்களின், சிதைந்ததாய் கருதி பார்ப்பவர்களின் வாக்குமூலமாக இருக்கப்போகிறது.

psychology articles in tamil

http://minnambalam.com/k/1508178629
மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

இன்றைய நவீன சூழலில் மனநோய் என்பது சந்தைப்படுத்தப்படுகிறதா என்னும் மிகப் பெரிய கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. மனநலம் பற்றி சமூகத்தால் உச்சரிக்கத் தயங்கும் வாழ்க்கையில், மனநலம் பற்றி உரக்க பேசுவதன் அவசியம் அதன் சிக்கல்களை எளிமையாக்கி அதன் மேல் படிந்திருக்கும் சமூகக் கூச்சத்தைத் துடைத்தெறிவதே ஆகும். சமூகம் கோட்பாடுகளாய் வைத்திருக்கும் அளவீடுகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் யதார்த்த வாழ்க்கை புகுத்தும் நவீன மாயத்திரைகளில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். இது எல்லா வயதினருக்குமான சிக்கலாக இருக்கிறது.
மின்னணு சாதனங்களால் நிரம்பிக் கிடக்கும் வாழ்க்கை இது. அலைபேசி கொடுத்துதான் குழந்தைகளை சாப்பிட வைக்கிறார்கள். அதிலிருக்கும் விளையாட்டுகளுக்குப் பெரியவர்களே அடிமையாகிறார்கள். ஒரு காலகட்டத்தில் அப்படியொரு விளையாட்டுக்கு நான் அடிமையாகி வாழ்வில் ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அந்த விளையாட்டில் அன்று நான் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கும் அளவுக்குப் போதையானபோது நான் செய்த ஒன்றுதான் – அவ்விளையாட்டை என் அலைபேசியிலிருந்து நீக்கியது.
பதின்ம வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மன, உடல்ரீதியிலான பாலியல் குழப்பங்களுக்கு இந்த மெய்நிகர் இணைய உலகம் விரல் பிடித்து கரடுமுரடான பாதைக்கு அழைத்து செல்கிறது. சவீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு பள்ளி மாணவி. அப்பா வெளியூரில் நல்ல வேலை பார்க்க, சென்னையில் அம்மாவுடன் வசித்து வருகிறாள். அம்மாவும் அரசாங்கத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சவீதாவுக்கு மிக நவீனமான விலை உயர்ந்த போனை வாங்கிக் கொடுக்கிறார்கள் பெற்றோர்.
சவீதாவுக்குத் தன் உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை உண்டு. தான் குண்டாக கறுப்பாக இருப்பதாக நினைப்பதாகவும் அதனாலேயே அழகற்றவராக மற்றவர்கள் விரும்பத்தகாத பெண்ணாகவும் இருப்பதாக நினைக்கிறாள். முகநூலில் ஒரு கணக்கை உருவாக்கி உடலமைப்பு தெரியாமல் பல கோணங்களில் கண், காது, மூக்கை புகைப்படம் எடுத்து பதிவிடுகிறாள். அதற்கு கிடைக்கும் விருப்பக்குறிகள் அவளுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. கீழே சிலர் அவளை வர்ணித்து இடும் கருத்துகள் அவள் மனதுக்கு இதமாக இருந்தன.
அவளது பள்ளியும் மிக வசதியானவர்கள் படிக்கும் பள்ளி. பல வெளுத்த தோல்களுக்கிடையே இவளது கறுத்த நிறத்தை கிண்டல் செய்தார்கள். இப்படியான காலகட்டங்களில் தொடர்ந்து முகநூல் கருத்துகளை வாசித்து வாசித்து தனது மனதை சந்தோஷப்படுத்திக் கொண்டாள் சவீதா. ஒருநாள் தற்செயலாக வீட்டு அலமாரியில் அவளைத் தத்தெடுத்தற்கான ஆவணங்களைப் பார்த்து மனமுடைந்து போகிறாள். அம்மாவிடம் மறைமுகமாக இது குறித்து பேசி காயப்படுத்துகிறாள்.

இப்போது, முகநூல் உள்டப்பில் தன்னிடம் பேசும் ஆண்களுக்கு தன் அலைபேசி எண்ணைக் கொடுக்கிறாள் அவள். அவர்களில் ஐந்து பேருக்கும் மேலே வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். அவளது அடுக்குமனை குடியிருப்பில் இருக்கும் மனிதர்கள் இதை அவள் அம்மாவிடம் சொல்ல உடைந்தே போகிறார் அவர். அவள் அலைபேசியை வாங்கிப் பார்த்தால் பாய் ஃப்ரெண்ட் 1 என்று ஆரம்பித்து பாய் ஃப்ரெண்ட் 40 என குறிப்பிட்டு இருக்கிறாள். எல்லோருடனும் பள்ளிக்குப் போகாமல்கூட பேசிக் கொண்டிருக்கிறாள் சவீதா. அம்மா அலைபேசியை வாங்கி பீரோவில் வைக்க அவள் வன்முறையைக் கையில் எடுக்கிறாள். அம்மிக் கல்லை வைத்து பீரோவை உடைத்து அலைபேசியை எடுக்கப் பார்க்கிறாள்.
குழந்தையின்மையை ஈடு செய்ய தத்தெடுத்த குழந்தையை, பெற்ற குழந்தையை விடவும் நன்றாக வளர்க்க வேண்டுமென்று நினைத்து சவீதா கேட்டதை எல்லாமே வாங்கிக் கொடுத்த அம்மா உடைந்து போகிறார். மனநலக் காப்பகத்தின் உதவியை நாட அவர்கள் வந்து அவளைக் கூட்டிச் செல்கிறார்கள்.
முதல் பதினைந்து நாள்கள் மிக வன்முறையாக நடந்து கொண்டு தன்னைத் தானே கூட காயப்படுத்திக் கொண்டவளின் ஒரே கோரிக்கை அலைபேசி வேண்டும். மெல்ல மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா பேசும்போது அவள் தன்னை யாருமே அங்கீகரிக்காத ஏக்கத்தை பகிர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே சவீதாவின் அம்மாவின் அம்மா சவீதாவைத் தத்தெடுப்பதை விரும்பாததினால் அவரை ஒருபோதும் தூக்கக் கூட செய்ததில்லை. அந்த நிராகரிப்பு தரும் வலி மெல்ல மெல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே வேர் விட்டிருக்கிறது. சவீதா எட்டு வயதில் இருக்கும்போது வீட்டுக்கு வந்த அம்மாவின் அக்கா மகன் அவளை பாலியியல் சீண்டலுக்கு ஆளாக்கியிருக்கிறான். அது பற்றி அம்மாவிடம் இவள் சொன்னபோதும் அம்மாவால் அதை வெளியே சொல்ல குடும்ப காரணங்களாலும், யாரும் விரும்பாமல் குழந்தையைத் தத்தெடுத்த காரணத்தை இப்போது பழி சொல்ல பயன்படுத்துவார்கள் என்பதாலும் அவரால் இயலவில்லை. ஒருவேளை அவனே அவளிடம் அவள் தத்தெடுத்தக் குழந்தை என்று சொல்லியிருக்கக் கூடுமென சவீதாவின் அம்மா நம்பினார்.
“நம் மூளையில் ரிவார்ட் சர்க்கியூட் என்னும் ஒரு பகுதி உண்டு. அது பாராட்டுகளால் தூண்டப்படும். அது ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும். அதை சவீதா முகநூல் கருத்துகளால் திருப்தி செய்கிறாள். நம்மில் சிலர் காபியால், இசையால், முகநூல் புகைப்படத்தால் அதை திருப்திப்படுத்துகிறோம்” என்கிறார்கள் மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா.
சவீதாவுக்கான சிகிச்சை மிக முக்கியமாக அலைபேசியிலிருந்து அவரை தூரம் வைக்கும் முயற்சியாகவே இருந்தது. மேலும், அவரின் தாழ்வு மனப்பான்மையை நீர்த்துப்போக செய்யும் தன்னம்பிக்கை சார்ந்த முறைமை பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மெல்ல தான் செய்தது தவறென அவர் நினைக்க ஆரம்பித்தார். எங்களுக்கு முன்னமே அவர்கள் இருவருமே ஒளிவு மறைவு இல்லாமல் தத்தெடுத்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தோம். அது அவர்கள் உறவை இலகுவாக்கிற்று.
இந்த சமூகம் வைத்திருக்கும் சில நியதிகளை தங்கள் வாழ்வு தராசில் பலர் நிறுத்துவதேயில்லை. குழந்தையில்லை என்பதை ஒரு குற்றமாக இந்த சமூகம் பார்க்கும் கண்ணோட்டமே ஒரு மனநோய் தான். குழந்தையைத் தத்தெடுக்கும் முன்னமே ஏன் தத்தெடுக்க நினைக்கிறோம் என்பது பற்றிய ஒருமனோதத்துவ ஆலோசனை அவசியம் தேவை. தன்னை சிறந்த தாயாக நினைக்க வைக்க சவீதாவின் தாய் முனைய, அந்தப் பாசத்தைக்கொண்டே உணர்வு ரீதியான சுரண்டலைக் கச்சிதமாக செய்திருக்கிறார் சவீதா.
குழந்தைகள் கையில் இணையதளத்தை பரவலாக கொடுப்பது மிகத் தவறான விஷயம். அதை பல பெற்றோர்கள் இன்று தங்களை அறியாமல் செய்து வருகிறார்கள். இளவயதில் மூளை மிக லேசாக ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டு விடும். சவீதாவின் அம்மா அறியாமல் பாசம் காட்டுவதாக நினைத்த விஷயம் சவீதாவின் வாழ்வையையே திசை மாற்றி விட்டது.
மனம் பற்றி படரும் உணர்வுக் கொடிதான். நவீன சிக்கல்களின் முழுசேதாரமும் இயந்திர உலகின் மூலமான மெய்நிகர் உறவினால்தான். அன்பும் பகிர்தலுமே மனதையும் மனித வாழ்வையும் உயிர்ப்பிக்க வைக்கிறது என்பதை புரிந்துகொண்டாலே விடுதலை நம் வசமே.


தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா - மைண்ட் ஜோன் மருத்துவமனை
எழுத்தாக்கம்: தமயந்தி