Addiction Treatment, Psychiatric Treatment and Emergencies, Alcohol and Drug De-addiction center, Child Guidance Clinic, Child Psychiatric Clinic
CONTACT US
Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020
Friday, 2 September 2016
our article in minnambal.com part II
- டாக்டர் சுனில் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் உதவியுடன் நாச்சியாள் சுகந்தி
‘ஒரு பெண், ஆணைக் காதலிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணைக் கொல்லும் போக்கு தமிழகத்தில் தினம் ஒரு நிகழ்வாக நடந்து கொண்டிருப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம்’ என்கிறார் டாக்டர் சுனில். ஆமாம், 90-களுக்கு முன்பான தமிழ் சினிமாகளில் காதல் தோல்வி என்றால் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாட்டுப் பாடும் ஹீரோக்களைத்தான் சினிமா அதிகம் காட்டியது. காதல் தோல்வியடைந்த ஹீரோ, அதிகபட்சமாக சோகமான முகத்துடன் தாடியுடன் வலம் வருவார். ஆனால், தற்போது வரும் படங்களில் ஹீரோ என்று திரையில் காட்டப்படுபவர் தன்னை பொறுக்கியாகவும், வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரிபவர்களாகவுமே காட்டப்படுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும், இவர்கள் விரும்பும் பெண் அவர்களை உடனடியாகக் காதலிக்க வேண்டும். அப்படி காதலிக்கவில்லை என்றால், ‘அடிடா அவளை… வெட்டுறா அவளை’ என்று பாடுபவர்களை ஹீரோக்களாக கொண்டாடுகிறோம். இந்த மாதிரியான சினிமாக்களும் தொலைக்காட்சி தொடர்களும் திரும்பத் திரும்ப ஒரு சமூகத்தில் வந்து கொண்டிருக்கும்போது, அதை பார்க்கும் இளைஞர்களுக்கு, ‘நாமும் இப்படி வாழலாம்’ என்கிற எண்ணம்தான் மேலோங்கும் என்கிறார் டாக்டர் சுனில். ஒரு சமூகத்தின் கலைப் படைப்புகள் மனித வாழ்வை செம்மைப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். ஆனால், இங்கு பெரும்பாலான கலை படைப்புகள் வன்முறையைக் கொண்டாடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆக சினிமா, நாடகங்கள் உள்ளிட்ட கலைப் படைப்புகளுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது என்பதை படைப்பாளிகள் உணராத வரையில், அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
சரி, ஒரு ஆண் ஏன் காதலை மறுக்கும் பெண்ணை கொலை செய்யும் அளவுக்குத் துணிகிறான் என்ற கேள்விக்கு, அந்த ஆணுக்குப் பெண் மீது ஏற்படும் ஈர்ப்பால், அவள் மீது அளவற்ற ‘பொஸசிவ்னஸ்’ உண்டாகிறது. அவள் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் மூளையில் ஊறிவிடுகிறது. ‘எனக்கு மட்டும்தான் அவள்’ என்கிற எண்ணத்தில்தான் எல்லா சிக்கல்களும் ஆரம்பிக்கின்றன. இந்த பொஸசிவ்னெஸ், ‘அய்யோ அவள் நமக்குக் கிடைக்க மாட்டாளோ’ என்கிற பயத்தைக் கொடுக்கிறது. அந்த பயம், இவள் நம்மை விட்டுவிட்டுப் போய்விடுவாளோ என்கிற சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. அந்த சந்தேகம், அவனை சதா அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். அதன் உச்சம், அடக்க முடியாத கோபமாக மாறும். அந்த கோபத்தில் அவளை அணுகும் போது அவள் மறுப்பு சொன்னால், அது வன்மமாக மாறிகிறது. பயம், கோபமாக மாறி, வன்மமாக மாறும் இடம்தான் மிகவும் அபாயகரமானது. வன்மத்தில் சிலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர். சிலர், அதீத மன அழுத்தத்துக்கு ஆட்பட்டு, மிருகத்தனமாக மாறி, அடுத்தவரை அழிக்கத் தொடங்குகின்றனர். அது கொலையில் முடிகிறது. ‘எனக்குக் கிடைக்காதவள் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்கிற ஆணின் ஈகோதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம்’ என்கிறார் எழுத்தாளர் வா. மணிகண்டன்.
காதல் என்பது உணர்வுப்பூர்வமான விஷயம் என்ற மெல்லுணர்வு சமூகத்தில் இருந்து தேய்ந்து வருகிறது. காதல் என்பது காமத்துக்காக ஒரு பெண்ணை அடையும் வழி என்றே இன்றைய இளைஞர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்கிறார் சுனில். இதற்குக் காரணம், இதைப் பற்றி பருவ வயதில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. முன்பு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வீட்டில், பருவ வயதில் இருப்பவர்களிடம் பெரியவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் காதல், ஆண் பெண் உறவு, செக்ஸ் என வாழ்வின் முக்கியமான விஷயங்களையும் குறித்து பேசுவார்கள். ஆனால், தனிக் குடும்பம் பெருகிவிட்ட சூழலில், வளரும் பிள்ளைகளிடம் இதைப் பற்றி வீட்டிலோ, கல்லூரியிலோ யாரும் பேசுவதில்லை. அவர்கள் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள இருக்கும் ஒரே மீடியம் டிவி, சினிமா என்றாகிவிட்டது. இதுவும் இந்த சிக்கல்களுக்குக் காரணம்.
இது உளவியல்ரீதியான காரணம். ஆனால், ஒரு சமூகத்தில் அச்சுறுத்தும் கொலைகள் நடக்கும்போது அதற்கு பல காரணங்கள் இருக்கும். அந்த சமூகத்தில் பின்பற்றப்படும் ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடு எல்லாம் முக்கியக் காரணம். இன்றைய வாழ்வில், ‘உனக்கு என்ன வேண்டுமோ, அதைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்’ என்கிற சுயநலப் போக்குதான் அதிகமாக உள்ளது. இந்த சுயநலப்போக்கு, ஒரு சமூகத்தின் மொத்த ஆன்மாவையும் அன்பு, கருணையின்றி அழிக்கும். இந்த சுயநலப் போக்குதான், ‘நான் விரும்பிய பெண்ணை அடைவதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்ற சிந்தனையை வளர்த்தெடுக்கிறது. அடுத்து, இங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை. சட்டம் ஒழுங்கு மிகத் தீவிரமாக பின்பற்றப்படும் நாடுகளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் எழவே எழாது. ஆனால், தமிழ்நாட்டில் வருடத்துக்கு, காதல் என்ற பெயரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கும்போதும், அதை ஒடுக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவே இல்லை என்பது துயரம்தானே? இந்த நிகழ்வுகள் குறித்து காவல்துறை அமைச்சர் ஜெயலலிதா இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது, மக்கள் மீதும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. இம்மாதிரியான தலைமைக் கூட இப்பிரச்னை பூதகரமாக வெடிப்பதற்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சரி, இந்த நிலையை மாற்ற வழியே இல்லையா? இந்த நிலையை சரி செய்ய பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் அவர்கள் வளரிளம் பருவத்தில் இருகும்போது, காதல், ஆண் பெண் உறவு குறித்து பேசுவதுதான் சரியான தீர்வு என்கிறார் டாக்டர் ஜெயசுதா காமராஜ்.
தங்கள் பிள்ளைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்னை இருக்கிறதா என்று பெற்றோர் கண்காணித்து, அதற்கு சரியான சிகிச்சையை பெற்றோர்தான் மேற்கொள்ள வேண்டும். அடுத்த மிகப்பெரிய பொறுப்பு கல்வி நிறுவங்களுக்குத்தான் இருக்கிறது. மாணவர்களை படிப்பு, மார்க் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே வழிநடத்துவதால், வாழ்வதற்கான வழிமுறைகளை மாணவர்கள் பள்ளியில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்கிறார் டாக்டர் ஜெயசுதா. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் பிராய்லர் கோழிகளாக நடத்தும் மனப்போக்கு அதிகம் இருக்கிறது.
பள்ளிகளில் கட்டாயம் ‘Life skill training’ நடத்தப்பட வேண்டும். அதில் முக்கியமாக பத்து விஷயங்கள் சொல்லித் தரப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதில், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், மற்றவர்களுடன் பேசும் திறன், உறவுகளைப் பேணும் திறன், மன அழுத்தத்தை கையாளும் திறன், சுயமரியாதையை வளர்த்தெடுக்கும் திறன், மற்றவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் திறன், கடினமான சூழ்நிலைகளைக் கையாளும் திறன் உள்ளிட்ட பத்து திறன்களை வளர்க்கும் பொறுப்பு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இருக்கிறது. ஆனால், நம் கல்விமுறையே மதிப்பெண் என்கிற சிறு வட்டத்துக்குள் அடைந்து கிடப்பதால், வாழ்க்கை என்னும் பெரிய வட்டத்தை ஆளும் திறனை மாணவர்களிடம் வளர்த்தெடுக்க மறந்து விடுகிறார்கள் என்பதை விட அதைப் பற்றி சிறிதளவு கூட யோசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இத்தனை பெண்கள் வன்முறையாக கொல்லப்பட்ட பிறகாவது, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது கட்டாயமாக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துவது அவசியம். பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நாட்டில், அமைதியும் செல்வமும் ஒருபோதும் நிலைக்காது என்பது வரலாற்று உண்மை. என்ன செய்யப் போகிறோம் நீங்களும் நானும் அரசும்?!
https://minnambalam.com/k/1472754655
‘ஒரு பெண், ஆணைக் காதலிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணைக் கொல்லும் போக்கு தமிழகத்தில் தினம் ஒரு நிகழ்வாக நடந்து கொண்டிருப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம்’ என்கிறார் டாக்டர் சுனில். ஆமாம், 90-களுக்கு முன்பான தமிழ் சினிமாகளில் காதல் தோல்வி என்றால் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாட்டுப் பாடும் ஹீரோக்களைத்தான் சினிமா அதிகம் காட்டியது. காதல் தோல்வியடைந்த ஹீரோ, அதிகபட்சமாக சோகமான முகத்துடன் தாடியுடன் வலம் வருவார். ஆனால், தற்போது வரும் படங்களில் ஹீரோ என்று திரையில் காட்டப்படுபவர் தன்னை பொறுக்கியாகவும், வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரிபவர்களாகவுமே காட்டப்படுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும், இவர்கள் விரும்பும் பெண் அவர்களை உடனடியாகக் காதலிக்க வேண்டும். அப்படி காதலிக்கவில்லை என்றால், ‘அடிடா அவளை… வெட்டுறா அவளை’ என்று பாடுபவர்களை ஹீரோக்களாக கொண்டாடுகிறோம். இந்த மாதிரியான சினிமாக்களும் தொலைக்காட்சி தொடர்களும் திரும்பத் திரும்ப ஒரு சமூகத்தில் வந்து கொண்டிருக்கும்போது, அதை பார்க்கும் இளைஞர்களுக்கு, ‘நாமும் இப்படி வாழலாம்’ என்கிற எண்ணம்தான் மேலோங்கும் என்கிறார் டாக்டர் சுனில். ஒரு சமூகத்தின் கலைப் படைப்புகள் மனித வாழ்வை செம்மைப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். ஆனால், இங்கு பெரும்பாலான கலை படைப்புகள் வன்முறையைக் கொண்டாடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆக சினிமா, நாடகங்கள் உள்ளிட்ட கலைப் படைப்புகளுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது என்பதை படைப்பாளிகள் உணராத வரையில், அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
சரி, ஒரு ஆண் ஏன் காதலை மறுக்கும் பெண்ணை கொலை செய்யும் அளவுக்குத் துணிகிறான் என்ற கேள்விக்கு, அந்த ஆணுக்குப் பெண் மீது ஏற்படும் ஈர்ப்பால், அவள் மீது அளவற்ற ‘பொஸசிவ்னஸ்’ உண்டாகிறது. அவள் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் மூளையில் ஊறிவிடுகிறது. ‘எனக்கு மட்டும்தான் அவள்’ என்கிற எண்ணத்தில்தான் எல்லா சிக்கல்களும் ஆரம்பிக்கின்றன. இந்த பொஸசிவ்னெஸ், ‘அய்யோ அவள் நமக்குக் கிடைக்க மாட்டாளோ’ என்கிற பயத்தைக் கொடுக்கிறது. அந்த பயம், இவள் நம்மை விட்டுவிட்டுப் போய்விடுவாளோ என்கிற சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. அந்த சந்தேகம், அவனை சதா அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். அதன் உச்சம், அடக்க முடியாத கோபமாக மாறும். அந்த கோபத்தில் அவளை அணுகும் போது அவள் மறுப்பு சொன்னால், அது வன்மமாக மாறிகிறது. பயம், கோபமாக மாறி, வன்மமாக மாறும் இடம்தான் மிகவும் அபாயகரமானது. வன்மத்தில் சிலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர். சிலர், அதீத மன அழுத்தத்துக்கு ஆட்பட்டு, மிருகத்தனமாக மாறி, அடுத்தவரை அழிக்கத் தொடங்குகின்றனர். அது கொலையில் முடிகிறது. ‘எனக்குக் கிடைக்காதவள் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்கிற ஆணின் ஈகோதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம்’ என்கிறார் எழுத்தாளர் வா. மணிகண்டன்.
காதல் என்பது உணர்வுப்பூர்வமான விஷயம் என்ற மெல்லுணர்வு சமூகத்தில் இருந்து தேய்ந்து வருகிறது. காதல் என்பது காமத்துக்காக ஒரு பெண்ணை அடையும் வழி என்றே இன்றைய இளைஞர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்கிறார் சுனில். இதற்குக் காரணம், இதைப் பற்றி பருவ வயதில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. முன்பு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வீட்டில், பருவ வயதில் இருப்பவர்களிடம் பெரியவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் காதல், ஆண் பெண் உறவு, செக்ஸ் என வாழ்வின் முக்கியமான விஷயங்களையும் குறித்து பேசுவார்கள். ஆனால், தனிக் குடும்பம் பெருகிவிட்ட சூழலில், வளரும் பிள்ளைகளிடம் இதைப் பற்றி வீட்டிலோ, கல்லூரியிலோ யாரும் பேசுவதில்லை. அவர்கள் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள இருக்கும் ஒரே மீடியம் டிவி, சினிமா என்றாகிவிட்டது. இதுவும் இந்த சிக்கல்களுக்குக் காரணம்.
இது உளவியல்ரீதியான காரணம். ஆனால், ஒரு சமூகத்தில் அச்சுறுத்தும் கொலைகள் நடக்கும்போது அதற்கு பல காரணங்கள் இருக்கும். அந்த சமூகத்தில் பின்பற்றப்படும் ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடு எல்லாம் முக்கியக் காரணம். இன்றைய வாழ்வில், ‘உனக்கு என்ன வேண்டுமோ, அதைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்’ என்கிற சுயநலப் போக்குதான் அதிகமாக உள்ளது. இந்த சுயநலப்போக்கு, ஒரு சமூகத்தின் மொத்த ஆன்மாவையும் அன்பு, கருணையின்றி அழிக்கும். இந்த சுயநலப் போக்குதான், ‘நான் விரும்பிய பெண்ணை அடைவதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்ற சிந்தனையை வளர்த்தெடுக்கிறது. அடுத்து, இங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை. சட்டம் ஒழுங்கு மிகத் தீவிரமாக பின்பற்றப்படும் நாடுகளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் எழவே எழாது. ஆனால், தமிழ்நாட்டில் வருடத்துக்கு, காதல் என்ற பெயரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கும்போதும், அதை ஒடுக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவே இல்லை என்பது துயரம்தானே? இந்த நிகழ்வுகள் குறித்து காவல்துறை அமைச்சர் ஜெயலலிதா இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது, மக்கள் மீதும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. இம்மாதிரியான தலைமைக் கூட இப்பிரச்னை பூதகரமாக வெடிப்பதற்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சரி, இந்த நிலையை மாற்ற வழியே இல்லையா? இந்த நிலையை சரி செய்ய பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் அவர்கள் வளரிளம் பருவத்தில் இருகும்போது, காதல், ஆண் பெண் உறவு குறித்து பேசுவதுதான் சரியான தீர்வு என்கிறார் டாக்டர் ஜெயசுதா காமராஜ்.
தங்கள் பிள்ளைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்னை இருக்கிறதா என்று பெற்றோர் கண்காணித்து, அதற்கு சரியான சிகிச்சையை பெற்றோர்தான் மேற்கொள்ள வேண்டும். அடுத்த மிகப்பெரிய பொறுப்பு கல்வி நிறுவங்களுக்குத்தான் இருக்கிறது. மாணவர்களை படிப்பு, மார்க் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே வழிநடத்துவதால், வாழ்வதற்கான வழிமுறைகளை மாணவர்கள் பள்ளியில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்கிறார் டாக்டர் ஜெயசுதா. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் பிராய்லர் கோழிகளாக நடத்தும் மனப்போக்கு அதிகம் இருக்கிறது.
பள்ளிகளில் கட்டாயம் ‘Life skill training’ நடத்தப்பட வேண்டும். அதில் முக்கியமாக பத்து விஷயங்கள் சொல்லித் தரப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதில், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், மற்றவர்களுடன் பேசும் திறன், உறவுகளைப் பேணும் திறன், மன அழுத்தத்தை கையாளும் திறன், சுயமரியாதையை வளர்த்தெடுக்கும் திறன், மற்றவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் திறன், கடினமான சூழ்நிலைகளைக் கையாளும் திறன் உள்ளிட்ட பத்து திறன்களை வளர்க்கும் பொறுப்பு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இருக்கிறது. ஆனால், நம் கல்விமுறையே மதிப்பெண் என்கிற சிறு வட்டத்துக்குள் அடைந்து கிடப்பதால், வாழ்க்கை என்னும் பெரிய வட்டத்தை ஆளும் திறனை மாணவர்களிடம் வளர்த்தெடுக்க மறந்து விடுகிறார்கள் என்பதை விட அதைப் பற்றி சிறிதளவு கூட யோசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இத்தனை பெண்கள் வன்முறையாக கொல்லப்பட்ட பிறகாவது, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது கட்டாயமாக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துவது அவசியம். பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நாட்டில், அமைதியும் செல்வமும் ஒருபோதும் நிலைக்காது என்பது வரலாற்று உண்மை. என்ன செய்யப் போகிறோம் நீங்களும் நானும் அரசும்?!
https://minnambalam.com/k/1472754655
our article in minnambalam.com
டாக்டர் சுனில் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் உதவியுடன் நாச்சியாள் சுகந்தி
பெண்களை பொதுவெளியில் சம உரிமையுடனும், சம அந்தஸ்துடனும் இந்த சமூகம் நடத்துவதுபோல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்லூரிக்கு செல்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள். எனவே, பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைத்துவிட்டது என அரசும், சமூகமும் மாறி மாறிச் சொல்லி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘அதிக அளவிலான பெண்கள் உயர்கல்விக்குச் செல்வது, என்னுடைய தலைமையிலான ஆட்சியில்தான் அதிகரித்து வந்துள்ளது’ என பெருமை பொங்க சட்டமன்றத்தில் கூறினார். ஆனால், அவர் பெருமையுடன் சொன்ன 48 மணி நேரத்துக்குள் தமிழகத்தின் தென்முனை கன்னியாகுமரியில் ஒரு ஆசிரியை பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையில் வீட்டுக்குள் வைத்து ஒரு பெண் கொல்லப்பட்டார். கரூரில் கல்லூரி மாணவியை வகுப்பறைக்குள் புகுந்து, கட்டையால் அடித்துள்ளனர்.
பெண் முன்னேற்றம் அதிகளவில் உள்ளது என்று கூறப்படும் மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் சவாலாகவும் உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை ஏற்படுத்திய பதற்றம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி அடங்குவதற்குள் விழுப்புரத்தில் நந்தினி என்ற பள்ளி மாணவி வீட்டுக்குள்ளேயே எரித்துக் கொல்லப்பட்டாள் என்பது பெண்களுக்கு மட்டும் துயரம் தரும் சம்பவம் மட்டுமல்ல; மொத்த சமூகத்துக்கும் பெரும் துயரைத் தரும் சம்பவம்தான். இவை துயரையும் துன்பத்தையும் மட்டும் ஒவ்வொரு மனத்திலும் விதைத்துவிட்டுச் செல்வதில்லை. ஒரு சமூகத்துக்கான பெரிய இழிவையும் உண்டாக்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது. இந்த இழிவுக்குச் சட்டம் ஒழுங்கு மட்டுமா காரணம்?
சமூகத்தின் அழிந்துவரும் வாழ்வியல் மதிப்பீடுகள் காரணமா? ஆண் மனதில் நிலவும் ஆணாதிக்க மனோபாவம் காரணமா? அல்லது நம் ஆண் குழந்தைகளிடம் பெண் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தாது காரணமா? இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இதற்கு இதுதான் காரணம் என்று ஒற்றைக் காரணத்தை எளிதாக சுட்டிக்காட்டிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க போக முடியாது. காரணம், ‘இன்றைய இளைய சமூகத்துக்கு காதல் - ஹார்மோன் - ஆசை - நிறைவேறுதல் - மறுப்பு - வெறி - கொலை என ஒரு சங்கிலித் தொடர் போல் ஒரு செயல் நடைபெறும்போது, அந்த சங்கிலித் தொடரில் ஒரு புள்ளியையோ அல்லது அனைத்துப் புள்ளிகளையோ சரியாகக் கோர்க்கத் தெரியாத அளவுக்கு இளைய சமூகத்தை உருவாக்கிய குற்றத்தில் பெரும்பங்கு அம்மா, அப்பா, உறவுகள், ஆசிரியர், மதம், ஊர், சினிமா, நாடகம் உள்ளிட்ட கலை, பொருளாதாரம் என அனைத்துக்கும் சரியளவிலான பங்கு இருக்கிறது’ என்கிறார் ‘மைன்ட் ஸோன்’ நிறுவனரும் மருத்துவ உளவியல் நிபுணருமான டாக்டர் சுனில்.
கரூரில் சோனாலி என்ற மாணவியைக் கட்டையால் அடித்துக் கொன்ற குற்றவாளி உதயகுமார் தன் வாக்குமூலத்தில் கூறுகையில், ‘அவள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுவாளோ என்கிற பயத்தில் அவளைக் கொன்றேன்’ என்று கூறியுள்ளான். விழுப்புரம் நவீனா கொலையாளியும் இதே காரணத்தைத்தான் சொன்னான். அதாவது, ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தன் காதலைக் கூறுகிறான். உடனே அந்த பெண் தனக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ விருப்பத்தை சொன்னவனிடம் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆண் எதிர்பார்க்கிறான். ஆனால், அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கருணையின்றி அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் துணிகிறான். இந்த உளவியியல்தான் தற்போது நடைபெற்ற அனைத்து கொலைகளின் பின்னணியாக இருக்கின்றன.
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு காதல் என்றால் என்ன என்பதை இந்த சமூகமோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ, உறவுகளோ, கலைப்படைப்புகளோ சரியாகச் சொல்லி புரிய வைத்திருக்கிறதா என்றால், நிச்சயம் அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. ‘அந்த புரிதலை ஏற்படுத்தத் தவறிய காரணத்தினால்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறையும் கொலை தாக்குதலும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது’ என்கிறார் டாக்டர் சுனில்.
ஆனால், நம் கலாச்சாரத்தில் பெண்ணை தெய்வம் என்கிறோம். காதலும் வீரமும் நிறைந்த சமூகம், தமிழ்ச் சமூகம் என்கிறோம். ஆனால், காதலை ஏற்காத பெண்ணைக் கொல்வதையா வீரம் என்கிறோம்? ஒரு ஆணின் வீரம், ஒரு பெண்ணை அடைவதிலா இருக்கிறது? என்ற கேள்விக்கு, உலகம் முழுக்க ஆணின் லட்சியம் பெண் என்பதே பதிலாக இருக்கிறது.
‘வேட்டை சமூகத்தில்தான் விரும்பிய பறவையை, விலங்கினை தன் இஷ்டத்துக்கு வேட்டையாடி, புசித்து, கொண்டாடி வாழ்ந்த ஆதி மனிதனின் மரபணு இன்னமும் நவநாகரீக ஆணாகக் கருதப்படும் இன்றைய ஆண்ட்ராய்டு - ஐபோன் யுக ஆண்களிடமும் இருக்கிறது. அந்த வேட்டை மனோபாவத்துடன்தான் ஆண் இன்னமும் பெண்ணை அணுகுகிறான்’ என்கிறார் டாக்டர் சுனில். இந்த வேட்டை மனோபாவம், பெண்ணையும் வேட்டைப் பொருளாகப் பார்க்க வைக்கிறது. பார்வை இச்சையாக மாறுகிறது. தன் இச்சைக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்காவிட்டால், மனம் கொடூரமாக மாறுகிறது.
‘ஆணின் மனம், பெண்ணின் மனதைப் போல், உளவியல் ரீதியாக கருணை நிறைந்தது கிடையாது’ என்கிறார் மருத்துவர் சுனில். அப்படியானால், இந்த ஆணின் வேட்டை மனதுக்கு பெண்கள் பலியாகிக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழும். இதற்குத் தீர்வே கிடையாதா? இந்த நவீன சமூகத்தில் ஆண் மனதை மாற்ற இயலாதா? என்று நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நாளை விடை காண்போம்.
அதற்கு முன்பு, வீட்டில் இருக்கும் ஆண் குழந்தைகளிடம் காதல், அன்பு, அன்பு பரிமாற்றம் குறித்து மனம்விட்டுப் பேசுங்கள் பெற்றோரே… ஆசிரியர்களே! நீங்கள் மனம் திறந்து பேசாவிட்டால், குற்றத்தைச் செய்யும் குற்றவாளிக்கு மறைமுகமாக உதவி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி செய்ய வேண்டுமா? யோசியுங்கள்!
https://minnambalam.com/k/1472668229www.mindzone.in
பெண்களை பொதுவெளியில் சம உரிமையுடனும், சம அந்தஸ்துடனும் இந்த சமூகம் நடத்துவதுபோல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்லூரிக்கு செல்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள். எனவே, பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைத்துவிட்டது என அரசும், சமூகமும் மாறி மாறிச் சொல்லி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘அதிக அளவிலான பெண்கள் உயர்கல்விக்குச் செல்வது, என்னுடைய தலைமையிலான ஆட்சியில்தான் அதிகரித்து வந்துள்ளது’ என பெருமை பொங்க சட்டமன்றத்தில் கூறினார். ஆனால், அவர் பெருமையுடன் சொன்ன 48 மணி நேரத்துக்குள் தமிழகத்தின் தென்முனை கன்னியாகுமரியில் ஒரு ஆசிரியை பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையில் வீட்டுக்குள் வைத்து ஒரு பெண் கொல்லப்பட்டார். கரூரில் கல்லூரி மாணவியை வகுப்பறைக்குள் புகுந்து, கட்டையால் அடித்துள்ளனர்.
பெண் முன்னேற்றம் அதிகளவில் உள்ளது என்று கூறப்படும் மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் சவாலாகவும் உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை ஏற்படுத்திய பதற்றம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி அடங்குவதற்குள் விழுப்புரத்தில் நந்தினி என்ற பள்ளி மாணவி வீட்டுக்குள்ளேயே எரித்துக் கொல்லப்பட்டாள் என்பது பெண்களுக்கு மட்டும் துயரம் தரும் சம்பவம் மட்டுமல்ல; மொத்த சமூகத்துக்கும் பெரும் துயரைத் தரும் சம்பவம்தான். இவை துயரையும் துன்பத்தையும் மட்டும் ஒவ்வொரு மனத்திலும் விதைத்துவிட்டுச் செல்வதில்லை. ஒரு சமூகத்துக்கான பெரிய இழிவையும் உண்டாக்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது. இந்த இழிவுக்குச் சட்டம் ஒழுங்கு மட்டுமா காரணம்?
சமூகத்தின் அழிந்துவரும் வாழ்வியல் மதிப்பீடுகள் காரணமா? ஆண் மனதில் நிலவும் ஆணாதிக்க மனோபாவம் காரணமா? அல்லது நம் ஆண் குழந்தைகளிடம் பெண் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தாது காரணமா? இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இதற்கு இதுதான் காரணம் என்று ஒற்றைக் காரணத்தை எளிதாக சுட்டிக்காட்டிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க போக முடியாது. காரணம், ‘இன்றைய இளைய சமூகத்துக்கு காதல் - ஹார்மோன் - ஆசை - நிறைவேறுதல் - மறுப்பு - வெறி - கொலை என ஒரு சங்கிலித் தொடர் போல் ஒரு செயல் நடைபெறும்போது, அந்த சங்கிலித் தொடரில் ஒரு புள்ளியையோ அல்லது அனைத்துப் புள்ளிகளையோ சரியாகக் கோர்க்கத் தெரியாத அளவுக்கு இளைய சமூகத்தை உருவாக்கிய குற்றத்தில் பெரும்பங்கு அம்மா, அப்பா, உறவுகள், ஆசிரியர், மதம், ஊர், சினிமா, நாடகம் உள்ளிட்ட கலை, பொருளாதாரம் என அனைத்துக்கும் சரியளவிலான பங்கு இருக்கிறது’ என்கிறார் ‘மைன்ட் ஸோன்’ நிறுவனரும் மருத்துவ உளவியல் நிபுணருமான டாக்டர் சுனில்.
கரூரில் சோனாலி என்ற மாணவியைக் கட்டையால் அடித்துக் கொன்ற குற்றவாளி உதயகுமார் தன் வாக்குமூலத்தில் கூறுகையில், ‘அவள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுவாளோ என்கிற பயத்தில் அவளைக் கொன்றேன்’ என்று கூறியுள்ளான். விழுப்புரம் நவீனா கொலையாளியும் இதே காரணத்தைத்தான் சொன்னான். அதாவது, ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தன் காதலைக் கூறுகிறான். உடனே அந்த பெண் தனக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ விருப்பத்தை சொன்னவனிடம் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆண் எதிர்பார்க்கிறான். ஆனால், அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கருணையின்றி அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் துணிகிறான். இந்த உளவியியல்தான் தற்போது நடைபெற்ற அனைத்து கொலைகளின் பின்னணியாக இருக்கின்றன.
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு காதல் என்றால் என்ன என்பதை இந்த சமூகமோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ, உறவுகளோ, கலைப்படைப்புகளோ சரியாகச் சொல்லி புரிய வைத்திருக்கிறதா என்றால், நிச்சயம் அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. ‘அந்த புரிதலை ஏற்படுத்தத் தவறிய காரணத்தினால்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறையும் கொலை தாக்குதலும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது’ என்கிறார் டாக்டர் சுனில்.
ஆனால், நம் கலாச்சாரத்தில் பெண்ணை தெய்வம் என்கிறோம். காதலும் வீரமும் நிறைந்த சமூகம், தமிழ்ச் சமூகம் என்கிறோம். ஆனால், காதலை ஏற்காத பெண்ணைக் கொல்வதையா வீரம் என்கிறோம்? ஒரு ஆணின் வீரம், ஒரு பெண்ணை அடைவதிலா இருக்கிறது? என்ற கேள்விக்கு, உலகம் முழுக்க ஆணின் லட்சியம் பெண் என்பதே பதிலாக இருக்கிறது.
‘வேட்டை சமூகத்தில்தான் விரும்பிய பறவையை, விலங்கினை தன் இஷ்டத்துக்கு வேட்டையாடி, புசித்து, கொண்டாடி வாழ்ந்த ஆதி மனிதனின் மரபணு இன்னமும் நவநாகரீக ஆணாகக் கருதப்படும் இன்றைய ஆண்ட்ராய்டு - ஐபோன் யுக ஆண்களிடமும் இருக்கிறது. அந்த வேட்டை மனோபாவத்துடன்தான் ஆண் இன்னமும் பெண்ணை அணுகுகிறான்’ என்கிறார் டாக்டர் சுனில். இந்த வேட்டை மனோபாவம், பெண்ணையும் வேட்டைப் பொருளாகப் பார்க்க வைக்கிறது. பார்வை இச்சையாக மாறுகிறது. தன் இச்சைக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்காவிட்டால், மனம் கொடூரமாக மாறுகிறது.
‘ஆணின் மனம், பெண்ணின் மனதைப் போல், உளவியல் ரீதியாக கருணை நிறைந்தது கிடையாது’ என்கிறார் மருத்துவர் சுனில். அப்படியானால், இந்த ஆணின் வேட்டை மனதுக்கு பெண்கள் பலியாகிக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழும். இதற்குத் தீர்வே கிடையாதா? இந்த நவீன சமூகத்தில் ஆண் மனதை மாற்ற இயலாதா? என்று நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நாளை விடை காண்போம்.
அதற்கு முன்பு, வீட்டில் இருக்கும் ஆண் குழந்தைகளிடம் காதல், அன்பு, அன்பு பரிமாற்றம் குறித்து மனம்விட்டுப் பேசுங்கள் பெற்றோரே… ஆசிரியர்களே! நீங்கள் மனம் திறந்து பேசாவிட்டால், குற்றத்தைச் செய்யும் குற்றவாளிக்கு மறைமுகமாக உதவி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி செய்ய வேண்டுமா? யோசியுங்கள்!
https://minnambalam.com/k/1472668229www.mindzone.in
Monday, 29 August 2016
Wednesday, 17 August 2016
Child guidance priniciples......
A summary of Adlerian thoughts for adults who guide children follows:
1. Freeing myself of the mistaken notion that I should control the child’s behavior
2. Accepting responsibility for changing my behavior first
3. Respecting the child or adolescent for making the best choices he or she can under the circumstances, as he or she perceives them
4. Realizing that children are attempting to make a place for themselves by whatever means seem available to them (i.e., socially useful or useless behavior)
5. Understanding that when children misbehave, it is an outward sign of their internal discouragement as participating members of our class or family
6. Committing myself to helping children learn self-discipline and cooperation by friendly and willing participation in the daily tasks we all must fulfill
7. Using choices as an alternative to ultimatums
8. Appreciating that when invited to contribute in a positive way to the family or class, children prefer to participate.
Tuesday, 16 August 2016
Your Psychological Characters depends upon the Position in the Family
Only Child
Only children may have the perceptions of the oldest child with one important exception. They are never dethroned and are less likely to feel the pressure of a close competitor. Only children may be perceived as quite mature for their age, comfortable with adults, responsible, cooperative, and developing mastery in cognitive skills. Their most likely perceived deficiency will be in relating to their peer group. Unlike the other youngsters, they may have little or no intimate give and take with other children. This can make early school experiences more difficult for these children as they begin coping with new life situations involving a peer group.
Oldest.
Oldest.
The oldest children can be typified as ruler for a day. They are the first and undisputed rulers of the family, the cause of glad tidings and happily the center of attention. One day a stranger appears in the house. Depending on the proximity in months or years, parental attitudes, gender difference, and other such variables, the oldest children evaluate the threat to their position in the family. On the average, they learn to take the newcomer in stride, especially if the parents are not too impressed with
some likely acting-out behavior and provide encouragement for the oldest children to recognize their place as secure within the family. Oldest children generally are able to relate well to adults, subscribe more readily to adult expectations and values, help at home particularly with the younger children, assume social responsibility, and develop socially acceptable ways of coping with life’s tasks. The tendency of oldest children is to please adults and to strive for perfection as a guiding fictive goal,
which can have serious consequences unless moderated over time.
some likely acting-out behavior and provide encouragement for the oldest children to recognize their place as secure within the family. Oldest children generally are able to relate well to adults, subscribe more readily to adult expectations and values, help at home particularly with the younger children, assume social responsibility, and develop socially acceptable ways of coping with life’s tasks. The tendency of oldest children is to please adults and to strive for perfection as a guiding fictive goal,
which can have serious consequences unless moderated over time.
Second
The second children arrive to find someone already ahead of them. When within 6 years of the older child, and again depending on age and similar variables, second children typically will pursue their place in ways opposite to the older child. They may be less responsible, more independent, more demanding of service, and more interested in whatever the oldest does not pursue or master. Second children often strive to be number one. The competition, referred to as sibling rivalry, can be quite intense in families that encourage comparisons between children. They can be portrayed by the illustration of persons in a foot race. Oldest children hear footsteps behind them and race to keep ahead. The second children see the person in front and feel that if they just try harder, maybe they can overtake them. Some individuals give up the race in discouragement. Others become admired as socially productive, although in some cases, they may gain only slight satisfaction from their efforts because they are motivated by the mistaken idea they must be productive to be valued as a person.
Middle
Middle children acquire an added condition to their existence, a younger sibling. Often in families of three, the middle children feel squeezed in their position. They perceive themselves as singularly disadvantaged. They have few, if any, advantages of the oldest child and now their position as the baby has been supplanted. To help really convince them of their predicament, the oldest children often help take care of the youngest, thereby establishing for themselves an ally. The oldest may be
seen as “bossy” toward the other children as well. Middle children will likely still move in directions opposite to the older child. They may be more independent, rebellious, judgmental, and sensitive, and overtly seek assurances of their place with the parents. As is true with each position in the family, middle children can transcend these early perceptions through compensatory behavior that eventually works to their benefit. Each child often perceives his or her position as the most burdensome to bear. Middle children may express this disappointment more loudly.
seen as “bossy” toward the other children as well. Middle children will likely still move in directions opposite to the older child. They may be more independent, rebellious, judgmental, and sensitive, and overtly seek assurances of their place with the parents. As is true with each position in the family, middle children can transcend these early perceptions through compensatory behavior that eventually works to their benefit. Each child often perceives his or her position as the most burdensome to bear. Middle children may express this disappointment more loudly.
Youngest
Youngest children enjoy positions that they perceive as the center of attention. In addition to parents, they have older siblings to entertain and provide them service. Although the youngest children might be troublesome at times, they have a protector to care for them. In fact, as youngest children get a little older, it is even fun to start something with the middle child and watch the older ally and the parents run to save the baby. They are often described as cute, a charmer, and the family’s baby, no matter how old they become. They may choose to use this charm and manipulative ways to just get by and enjoy life’s many pleasures. On the other hand, with family values by both parents on achievement, they might be the hardest runners and greatest achievers of all if they perceive that as a way to make their place. They can be great entertainers and comfortable before an audience, whereas many people abhor, for example, public speaking.
+91 9444 297058 +91 91760 55660
Tuesday, 5 April 2016
MIND ZONE: CBT FOR ALCOHOLISM
MIND ZONE: CBT FOR ALCOHOLISM: The special strengths that cognitive therapy emphasis on (1) the identification and modification of beliefs that exacerbate cravings,...
MIND ZONE
MIND ZONE
our experience with substance abuse treatment
Our experience with substance abuse treatment is "no single
treatment approach or modality has been demonstrated to be superior to all others" .
1. There is no single treatment approach that is effective for all
persons with alcohol problems.
2. The provision of appropriate, specific treatment modalities can
substantially improve outcome.
3. Brief interventions can be quite effective compared with no
treatment, and they can be quite cost-effective compared with
more intensive treatment.
4. Treatment of other life problems related to drinking can
improve outcome in persons with alcohol problems.
5. Therapist characteristics are partial determinants of outcome.
6. Outcomes are determined in part by treatment process factors,
post treatment adjustment factors, the characteristics of
individuals seeking treatment, the characteristics of their
problems, and the interactions among these factors.
7. People who are treated for alcohol problems achieve a continuum
of outcomes with respect to drinking behavior and alcohol problems
and follow different courses of outcome.
8. Those who significantly reduce their level of alcohol consumption
or who become totally abstinent usually enjoy improvement in other
life areas, particularly as the period of reduced consumption
becomes more extended.
Sunil Kumar Jayasudha Kamaraj
Clinical Psychologist Counseling Psychologist
Founder- Mind Zone Co-founder, Mind Zone
+91 9444 297058 +91 91760 55660
MIND ZONE: CBT FOR ALCOHOLISM
MIND ZONE: CBT FOR ALCOHOLISM: The special strengths that cognitive therapy emphasis on (1) the identification and modification of beliefs that exacerbate cravings,...
MIND ZONE
MIND ZONE
CBT FOR ALCOHOLISM
(1) the identification and modification of beliefs that exacerbate cravings,
(2) the amelioration of negative affective states (e.g., anger, anxiety, and hopelessness) that often trigger drug use,
(3) teaching patients to apply a battery of cognitive and behavioral skills and techniques, and not just willpower, to become and remain drug-free, and
(4) helping patients to go beyond abstinence to make fundamental positive changes in the ways they view themselves, their life, and their future, thus leading to new lifestyles.
Sunil Kumar Jayasudha Kamaraj
Clinical Psychologist Counseling Psychologist
Founder - Mind Zone Co-founder, Mind Zone
+91 9444 297058 +91 91760 55660
Subscribe to:
Posts (Atom)
