CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Wednesday 19 April 2017

psychiatric hospital in chennai

‘’என்னப்பா… நேத்து ஆபீஸ் வரல?’’
‘’உடம்பு சரியில்ல சார்…’’
-இந்த உரையாடலைக் கேட்காத செவிகளே உலகத்தில் இல்லை.
உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை… அலுவலகத்தில் ஒரு நாள் லீவுக்காக சொல்லும் ஊழியரில் ஆரம்பித்து, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்கும் அரசியல்வாதி வரை அனைவரும் உபயோகப்படுத்துகிறோம்.
ஆனால் உடல்நிலையைப் போன்றே மனநிலை பாதிக்கப்பட்டோரும் நம்மில், நமக்கிடையில், நம்மைச் சுற்றி உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
2015- 16ஆம் ஆண்டில், நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மனநல ஆய்வுதரும் புள்ளிவிவரப்படி, 13.7 சதவிகிதம் பேர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 10.6 சதவிகிதம் பேருக்கு உடனடி மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்பதுதான் அந்த ஆய்வு சொல்லும் அபாயகரமான புள்ளி விவரம்.
23 வயதான அந்த கல்லூரி மாணவன் பெயர் ஜேம்ஸ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்ற மாணவர்களைப் போலவே கல்லூரியின் வகுப்பறைகளைவிட சினிமா, ஹோட்டல் என்று வெளியே சுற்றுவதை அதிகம் விரும்பும் மாணவன்தான் ஜேம்ஸும். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதற்கு பணம் தேவைப்படுமே… பெற்றோர் தரும் பாக்கெட் மணி ஒரு நாளைக்கு சில மணி நேரங்களுக்கே போதாதநிலையில், பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ். அப்போதுதான், தனது சீனியர் மாணவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு பத்தாயிரம், இருபதாயிரம் என்று சம்பாதிப்பதை அறிந்தான். இயல்பிலேயே பைக் ரைடிங்கில் கில்லாடியான ஜேம்ஸ்… உடனடியாக தானும் பைக் ரேஸில் கலந்துகொள்ள ஆரம்பித்தான்.
அரக்கத்தனமாக உறுமும் சத்தத்தோடு பைக் ரேசில் கலந்துகொண்ட ஜேம்ஸ் பலமுறை விபத்துகளில் சிக்கியிருக்கிறான். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதுபோல, ஜேம்ஸின் பைக் ரேஸ் அத்துமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டு அதில் பல உயிர்களும் பறிபோயின.
மெல்ல மெல்ல இந்த குற்றவுணர்ச்சி ஜேம்ஸை உறுத்தியது. பெற்றோருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பான். பிளேடை எடுத்து தன் கை, கழுத்துப் பகுதிகளில் கீறிக்கொள்வான். ஜேம்ஸின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு பெற்றோர் அதிர்ந்தனர். அடிக்கடி அவன் மேற்கொண்ட தற்கொலை முயற்சி அவர்களை நிலைகுலைய வைத்தது.
கோபத்தை அடக்கிக்கொள்வதிலும், ஆசையை தள்ளிப்போடுவதிலும், உறவுகளை நிலையாக வைத்துக்கொள்வதிலும் தோல்வி அடைந்திருந்தான். தங்கள் பிள்ளையின் எழுச்சிமிகு நடத்தையாலும், தீய நண்பர்களின் சேர்க்கையாலும், விளைவுகளை யோசிக்காமல் செயல்படும் அவனது வீரியத்தாலும் கவலையில் இருந்த பெற்றோருக்கு அந்தச் செய்தி கடுமையான வலியைக் கொடுத்தது.
ஆம்… மனரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜேம்ஸ்… மெல்ல மெல்ல போதைப் பழக்கத்துக்கும் ஆளாகிவிட்டிருந்தான். குறிப்பாக அவனது மது, கஞ்சா பழக்கம், அவனது அடிப்படை குணக் கோளாறுகளை மேலும் சிதிலப்படுத்தியது. எரியும் மனதை அணைக்க அவனுக்கு போதையே தேவையாகிவிட்டது.
மனநோயின் முழு வீச்சை இப்போது எட்டிவிட்டிருந்தான் ஜேம்ஸ்.
மனநோய் சில வேளைகளில் உயிரைக்கூட எளிதாக பறித்துப் போட்டுவிடும். மனச் சோர்வு குறைபாடுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லையென்றால், தற்கொலை வரை போக வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் அதைக் கொண்டவர் உயிரைக் கொல்லும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், போதையில் இருப்பவர்கள் முன்பின் யோசிக்காமல் ஈடுபடும் அத்துமீறல் நடத்தைகளால் (Impulsive Behavior) பல உயிர்கள் பலியாகும் அபாயம் நிறையவே இருக்கிறது.
ஜேம்ஸ் போன்றவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே உரிய மனநலப் பயிற்சிகள், சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை எனில்… சமுதாயத்தில் இருக்கிற அப்பாவிகளின் உயிரையும் பறித்து கடைசியில், தானும் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒரு பரிதாப பயங்கரமாகவே அவர்களின் வாழ்க்கை முடியும்.
Mind Zone மனநல மருத்துவமனையில் எல்லாவிதமான மன நோய்கள், மது/போதை பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கும், நடத்தைக் கோளாறுகளிலிருந்து மீளவும் உலகத்தரம் வாய்ந்த உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
தரமான மனநல மருத்துவர்களால் பயிற்சிகள் மூலமாகவும், மருந்து மாத்திரைகள் மூலமாகவும் Mind Zone மனநல மருத்துவமனையில் உயரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
இளையோருக்கு ஏற்படும் இத்தகைய மனநிலை கோளாறுகளுக்கும், மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் அவர்கள் முழுமையாக அப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு சராசரியான மனித வாழ்வை சஞ்சலமின்றி அனுபவிக்க முடியும்.
70 படுக்கைகள் கொண்ட Mind Zone மனநல மருத்துவமனை நாட்டில் மன பிரச்னைகளற்ற மனிதர்களை உருவாக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.
எதை இழந்தாலும் மனதை இழந்துவிடாதீர்கள்…
DR. சுனில் குமார்,
மருத்துவ உளவியல் நிபுணர்,
நிறுவனர் MIND ZONE
DR. ஜெயசுதா காமராஜ்,
உளவியல் நிபுணர்,
துணை நிறுவனர்- MIND ZONE

No comments:

Post a Comment