CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Showing posts with label Alcohol & Drug Rehabilitation in Chennai. Show all posts
Showing posts with label Alcohol & Drug Rehabilitation in Chennai. Show all posts

Tuesday, 28 May 2019

irrational beliefs

When our beliefs are rigid, they are called irrational beliefs and take the form of musts, absolute shoulds, or have to’s. When clients adhere to rigid premises, they will tend to draw irrational conclusions on the basis of them. These irrational conclusions, or derivative irrational beliefs, take the following forms:
1. I-can’t-stand-it-it is (low frustration tolerance)
2. Damnation (of self, others, and/or life conditions)
3. Absolute-and-never, dichotomous thinking (e.g., that I will always fail or never be approved of by significant others).


Dr. Sunil Kumar                                        Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                 Counselling Psychologist
Founder, Mind Zone                                  Co-founder, Mind Zone
9444297058                                               9176055660

Friday, 26 April 2019

Dialectical Behaviour Therapy at Mind Zone, Chennai

A lot of people struggle with overwhelming emotions. It’s as if the knob is turned to maximum
volume on much of what they feel. When they get angry or sad or scared, it shows up as a big,
powerful wave that can sweep them off their feet.

If you’ve faced overwhelming emotions in your life, you know what we’re talking about. There
are days when your feelings hit you with the force of a tsunami. And when that happens, it makes
you—understandably—afraid to feel things because you don’t want to get swept away by your
emotions. The trouble is, the more you try to suppress or put a lid on your emotions, the more
overwhelming they can get. 

What’s important to know right now is that trying to stop your feelings doesn’t work. There’s a fair amount of research to suggest that the likelihood of developing intense, overwhelming emotions may be hardwired from birth. But it can also be greatly affected by trauma or neglect during childhood

Trauma at critical points in our development can literally alter our brain structure in ways that make us more vulnerable to intense, negative emotions. However, the fact that a propensity to intense emotions is often rooted in genetics or trauma doesn’t mean the problem can’t be overcome. Thousands of people have used the skills you’ll can learn  to achieve better emotional control. They have changed their lives—and you can too.

So what are these skills, and how will they help you? Dialectical behavior therapy teaches four critically important skills that can both reduce the size of emotional waves and help you keep your balance when those emotions overwhelm you.

mind zone offers Dialectical Behavior Therapy for all the out patient and In- patient clients.  for further enquiry about DBT, feel free to contact in 9444297058  or 9176055660

Dr. Sunil Kumar                                                      Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                               Counselling Psychologist
Founder                                                                    Co-founder
Mind Zone                                                               Mind Zone
+91 9444297058                                                      +91 9176055660 

Monday, 22 April 2019

Beliefs

Beliefs are conclusions that are reached as a result of past learning, whether this is directly from personal experience or indirectly assimilated through peer and parental pressures to conform to a "normal" way of thinking (for that culture).
Having perceived a situation in a certain way, i.e. having picked on an aspect of it that he considers most significant, the individual will then make an evaluation, according to his beliefs, about how he relates to that aspect of the situation. He will (perhaps semi-consciously) say a sentence to himself, based on an underlying assumption or belief.
This belief may be rational, i.e. based on reality and what exists and is logical, or it may be irrational, based on delusion, prejudice and ideas that are fixed and not open to inspection.
For example a person is nearly knocked over by a bus, and he infers that the driver was going too fast, and then believes rationally that the driver, like anyone else, is a fallible human being and he had better make more allowance for poor driving in future, when crossing the road. Alternatively, he may respond irrationally and say to himself that it is absolutely terrible that the driver should do such a thing, and if he could get hold of the driver he would shoot him. This is a greatly exaggerated evaluation based on an underlying irrational belief, that the driver's behavior was impossible to tolerate.


Dr. Sunil Kumar                                       Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                Counseling Psychologist
Founder                                                     Co-founder
Mind Zone                                                Mind Zone
9444297058                                             9176055660

Tuesday, 16 April 2019

The Need for Psychiatric Hospital Admission

Internet Addiction

The definition of Internet addiction is disputed and varies; however, “Internet addiction” (IA) has been termed “pathological Internet use” (PIU) or “ Internet dependency” and is defined as the “inability to control one’s use of the Internet which leads to negative consequences in daily life” (Li, O’Brien, Snyder, & Howard, 2015)

Monday, 8 April 2019

psychiatric hospital in chennai

Professional school counselors need not withdraw from helping students with addictions, but rather, school counselors need to be effectively equipped to help students with addictions by being familiar with the warning signs of addiction, being able to effectively screen students for addictions, and then competently refer students to professional therapists specializing in addictions. Mind Zone  contribute to the efficacy and ability of the professional school counselor to support, challenge, help, encourage, and advocate for students with addictive disorders. We help professional school counselors grasp the significance of the digital age students are living in, assess the positive and negative consequences of technology and the Internet, and understand the ever-increasing problem of Internet addiction and a few related addictions. Also, we offers insight into an Adlerian perspective on addiction, gives resourceful information on effective and research-based interventions to be used as models for the effectual treatment of students with addictions, provides screening questions and tools for counselors to used during assessment, and includes a list of warning signs of various addictions in students for school counselors to reference when a potential addiction is suspected.


Dr.Sunil Kumar                                      Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                              Counseling Psychologist
Founder                                                   Co-founder 
MIND ZONE

Wednesday, 4 April 2018

LIFE TRAP


THE ELEVEN LIFETRAPS

Two life traps relate to a lack of safety or security in your childhood family – Abandonment and Mistrust

1.      Abandonment: The abandonment life trap is the feeling that people you love will leave you, and you will end up emotionally isolated forever. Whether you feel people close to you will die, leave home forever or abandon you because they prefer someone else, somehow, you feel that you will be left alone. Because of this belief, you may cling to people close to you too much. Ironically, you end up pushing them away. You may get very upset or angry about even normal separations.

2.      Mistrust and abuse: The mistrust and abuse life trap is the expectation that people will hurt or abuse you in some way – that they will cheat, lie, manipulate, humiliate, physically harm or otherwise take advantage of you. If you have this life trap, you hide behind a wall of mistrust to protect yourself. You never let people get too close. You are suspicious of other people’s intentions and tend to assume the worst. You expect that people you love will betray you. Either you avoid relationships altogether, form superficial relationships in which you do not really open up to others or you form relationships with people who treat you badly and then feel angry and vengeful toward them.

Two life traps relate to your ability to function independently in the world – Dependence and Vulnerability.

3.      Dependence: If you are caught in the dependence life trap, you feel unable to handle everyday life in a competent manner without considerable help from others. You depend on others to act as a crutch and need constant support. As a child, you were made to feel incompetent when you tried to assert your independence. As an adult, you seek out strong figures upon whom to become dependent and allow them to rule your life. At work, you shrink from acting on your own. Needless to say, this holds you back.

4.      Vulnerability: With vulnerability, you live in fear that disaster is about to strike – whether natural, criminal, medical or financial. You do not feel safe in the world. If you have this life trap, as a child, you were made to feel that the world is a dangerous place. You were probably overprotected by your parents, who worried too much about your safety. Your fears are excessive and unrealistic, yet you let them control your life and pour your energy into making sure that you are safe. Your fears may revolve around illness: having an anxiety attack, getting AIDS or going crazy. They may be focused around financial vulnerability: going broke and ending up on the streets. Your vulnerability may revolve around other phobic situations, such as fear of flying, being mugged or earthquakes.

Two life traps relate to the strength of your emotional connections to others – Emotional deprivation and Social exclusion.

5.      Emotional deprivation: It is the belief that your need for love will never be met adequately by other people. You feel that no one truly cares for you or understands how you feel. You find yourself attracted to cold and ungiving people or you are cold and ungiving yourself, leading you to form relationships that inevitably prove unsatisfying. You feel cheated and you alternate between being angry about it and feeling hurt and alone. Ironically, your anger just drives people further away, ensuring your continued deprivation. These are people who do not know what love is.

6.      Social exclusion: Social exclusion involves your connection to friends and groups. It has to do with feeling isolated from the rest of the world, with feeling different. If you have this life trap, as a child, you felt excluded by peers. You did not belong to a group of friends. Perhaps you had some unusual characteristic that made you feel different in some way. As an adult, you maintain your life trap mainly through avoidance. You avoid socializing in groups and making friends.  You may have felt excluded because there was something about you that other children rejected. Hence, you feel socially undesirable. As an adult, you may feel that you are ugly, sexually undesirable, and low in status, poor in conversational skills, boring or otherwise deficient. You re-enact your childhood rejection – you feel and act inferior in social situations. It is not always apparent that someone has a social exclusion life trap. Many people with this life trap are quite comfortable in intimate settings and are quite socially skilled. Their life trap may not show in one-to-one relationships. It sometimes surprises us to realize how anxious and aloof they may feel at parties, in classes, at meetings or at work. They have a restless quality – a quality of looking for a place to belong.

The two lifetraps that relate to your self-esteem are Defectiveness and Failure.

7.      Defectiveness: With defectiveness, you feel inwardly flawed and defective. You believe that you would be fundamentally unlovable to anyone who got close enough to really know you. Your defectiveness would be exposed. As a child, you did not feel respected for who you were in your family. Instead you were criticized for your “flaws”. You blamed yourself – you felt unworthy of love. As an adult, you were afraid of love. You find it difficult to believe that people close to you value you, so you expect rejection.

8.      Failure: Failure is the belief that you are inadequate of achievement, such as school, work and sports. You believe you have failed relative to your peers. As a child, you were made to feel inferior in terms of achievement. You may have had a learning disability or you may never have learnt enough discipline to master important skills such as reading. Other children were always better than you. You were called “stupid”, “untalented”, or “lazy”. As an adult, you maintain your life trap by exaggerating the degree of your failure and by acting in ways that ensure your continued failure.

Two life traps deal with self-expression – your ability to express what you want and get your true needs met: Subjugation and Unrelenting standards.

9.      Subjugation: With subjugation, you sacrifice your own needs and desires for the sake of pleasing others or meeting their needs. You allow others to control you. You do this either out of guilt – that you hurt other people by putting yourself first or fear that you will be punished or abandoned if you disobey. As a child, someone close to you, probably a parent subjugated you. As an adult, you repeatedly enter relationships with dominant controlling people and subjugate yourself to them or you enter relationships with needy people who are too damaged to give back to you in return.

10.  Unrelenting standards: If you are in unrelenting standards life trap, you strive relentlessly to meet extreme high expectations of yourself. You place excessive emphasis on status, money, achievement, beauty, order or recognition at the expense of happiness, pleasure, health, a sense of accomplishment and satisfying relationships. You probably apply your rigid standards to other people as well and are very judgemental. When you were a child, you were expected to be the best and you were taught that anything else was failure. You learnt that nothing you did was quite good enough.

Entitlement: The life trap entitlement is associated with the ability to accept realistic limits in life. People who have this life trap feel special. They insist that they be able to do, say or have whatever they want immediately. They disregard what others consider reasonable, what is actually feasible, the time or patience usually required at the cost of others. They have difficulty with self-discipline. Many of the people with this life trap were spoiled as children. They were not required to show self-control or to accept restrictions placed on other children. As adults, they still get very angry when they do not get what they want.


Monday, 2 April 2018

psychology behind foolishness

முட்டாள்தனம் குணப்படுத்த வேண்டிய கோளாறா?

முட்டாள்கள் தினத்தை ஒட்டிய சிறப்புப் பதிவு
பேனாவில் இருக்கும் மையைப் பிறரது முதுகில் தெளிப்பதும், மாட்டு வண்டிச் சக்கரத்தில் இருக்கும் உயவுப் பொருளை (Grease) பிறர் மீது தடவுவதும், ஒருகாலத்தில் முட்டாள் தினக் கொண்டாட்டங்களாக இருந்திருக்கின்றன. இதைச் செய்யாதவர்கள், ஏதேனும் ஒரு பொய்த் தகவலைக் கூறி ஏமாற்றிவிட்டு ஏப்ரல் ஃபூல் (April Fool) என்று கத்துவது வழக்கம். மாணவர்கள் மட்டுமல்ல, மக்களில் பலரும் அப்படித்தான் இருந்தார்கள்.
இப்போது நிலைமை அப்படியில்லை. நாம் ஆண்டு முழுவதும் பிறரை ஏமாற்றுகிறோம்; ஏமாறத் தயாராக இருக்கிறோம்.
அறிவீனம், மடமை, அபத்தம், மூடத்தனம், அசட்டுத்தனம், கோமாளித்தனம் என்று முட்டாள்தனம் பலவாறாகக் குறிப்பிடப்படுகிறது. இன்றைய வாட்ஸ்அப் உலகில், பெரும்பாலும் அறியாமை மட்டுமே முட்டாள்தனமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவருக்குத் தன்னைப் பற்றிய சுய அறிதல் இருக்கும்வரைக்கும், முட்டாள்தனம் என்பது அவரிடம் இருக்கும். நம்மைப் பற்றி ஒன்றும் தெரியாவிடில், நமது முட்டாள்தனம் என்னவென்பதே நமக்குத் தெரியாது. ஓர் அறிஞர் சொன்னது இது.
முட்டாள்தனம் மூன்று விதம்
எது முட்டாள்தனம் என்பது பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுவாக, முட்டாள்தனம் எதுவென்பதை வரையறுக்க மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதில் முதலாவதாக வருவது, மற்றவர்களுடன் அனுசரித்துப் போக மறுப்பது. சமூகம் வரையறுத்த விதிகளை ஒப்புக்கொள்ளாதவர்கள், எந்தக் காலத்திலும் மற்றவர்களால் விநோதமாகவே பார்க்கப்படுவார்கள். விதிவிலக்குகளை விலக்கிப் பார்க்கும் பெரும்பாலானவர்களின் பார்வையே இதற்குக் காரணம்.
இரண்டாவது, தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தன்மை. மூன்றாவது, ஒருவர் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் இருப்பது அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது. ஆனால், இதை உளவியல்பூர்வமாகப் பார்க்காமல், வெறுமனே ஒரு கருத்தாக மட்டுமே பார்த்தார்கள்.
முட்டாள்தனத்தின் வேறு பல வகைகள்
இங்கிலாந்தில் முட்டாள்தனம் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், அதைப் பல பிரிவுகளாக வகைப்படுத்தினர். முதலாவது, அறியாமையில் நம்பிக்கை கொள்வது (Confident Ignorance). ஆனால், அறியாமைக்கும் முட்டாள்தனத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தான் முட்டாள் என்று ஒருவர் உணர்வாரேயானால், அது முட்டாள்தனம். அதை உணரவே இல்லையெனில், அது அறியாமை. அறியாமையில் நாம் செய்யும் தவறுகள், நமது அறிவுக் கண்ணுக்குத் தெரியாமலே போய்விடும். இந்த அறியாமையைத்தான் சதுரங்க வேட்டையாடப் பயன்படுத்துகிறார்கள் சில மோசடிப் பேர்வழிகள்.
அடுத்து வருவது, சுய கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது (Lack of Control). இவ்வாறான குணாம்சம் கொண்டவர்கள் இடம், பொருள், ஏவல் தெரியாமல் வாழ்வார்கள்.
மூன்றாவது, கவனக் குறைவு அல்லது போதிய கவனம் செலுத்தாமை என்றும் சொல்லப்படும் Absent Minded. மிகப்பெரிய அறிவாளிகள்கூட, வேறொரு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவதன் காரணமாக, ஒரு சில அன்றாட விஷயங்களில் போதிய கவனத்தைக் காட்ட மாட்டார்கள். இவர்களது செயல்களும் பல நேரங்களில் விநோதமாகத் தெரியும். இவர்களையும், நமது சமூகம் முட்டாளாகவே பார்க்கிறது என்பது தனிக்கதை. சமீபத்தில் ஓர் அரசியல் கட்சித் தலைவர் தனது கட்சியைச் சேர்ந்தவரையே சிறந்த ஊழல்வாதி என்று பாராட்டினார். அதற்கும் Absent mindதான் காரணம்.
அறிவியல் காரணம்
முட்டாள்தனம் ஏன் வருகிறது என்பதனை அறிவியல்பூர்வமாகவும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். ஒருவரது முட்டாள்தனத்துக்கு மூளையின் முன்பகுதியில் (Frontal Lobe) ஏற்படும் கோளாறுகளே காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு மனிதன் சிறந்த நிர்வாகியாக இருக்க, அவனது முன்மூளைதான் முக்கியக் காரணம். திட்டமிடுதல், கவனம் செலுத்துதல், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, மொழி போன்றவை சரியாகச் செயல்பட இதுவே உதவி செய்கிறது. முன்மூளையில் சேதாரமோ, சிக்கலோ உண்டாகும்போது, ஒரு மனிதனின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். முட்டாள்தனம் வெளிப்படுவதென்பது இதன் பின்விளைவுதான்.
தகவல்களை முறைப்படுத்துவது (Information Processing) மூளையின் முக்கியச் செயல்பாடாகும். நமது சிந்தனையில் மிக முக்கியமானது, நம் சிந்தனையைப் பற்றி நாமே சிந்திப்பது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், ஒரு விஷயத்தை எப்படி யோசிக்கிறோம் என்று யோசித்துப் பார்ப்பது (Meta Cognition). அப்போது உணரப்படும் அறிவானது, நமது முட்டாள்தனத்தை அடையாளப்படுத்தும். இந்தச் செயல்பாடு குறைவாக இருந்தாலோ, இல்லாமலிருந்தாலோ ஒருவர் அடிக்கடி முட்டாளாவார் அல்லது மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவார்.
ஆங்கிலத்தில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொலவடை இது. “ஒருவனுக்குத் தான் முட்டாள் என்று எப்போது தெரிகிறதோ, அப்போது அவன் புத்திசாலி ஆகிறான்; ஒரு புத்திசாலி எப்போது தான் புத்திசாலி என்று நினைக்கிறானோ, அப்போது அவன் முட்டாள் ஆகிறான்”.
நமது சிந்தனைக்கும் செயலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நமது முட்டாள்தனமான எண்ணங்களே முட்டாள்தனமான செயலாக வெளிப்படுகின்றன. எனவே, நமது முட்டாள்தனம் வெளிப்படாமலிருக்க வேண்டுமானால், அப்படிப்பட்ட எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். இதனை Meta Cognitive Regulation என்று சொல்வார்கள்.
சமூக விதிகளுடன் அனுசரித்துப் போகாமல் இருப்பது, தன்னைத்தானே அழித்துக்கொள்வது, தனது திறனை வெளிப்படுத்தாமல் இருப்பது ஆகியன இதனால்தான் உலகில் முட்டாள்தனமாகக் கருதப்படுகின்றன.
முட்டாள்தனம் அவமானமா?
ஒருவரை மோசமான வார்த்தைகளால் தூற்றுவதைவிட, முட்டாள் என்ற ஒரு சொல் அதிகமான கோபத்தை ஏற்படுத்தும். காரணம், நாம் அனைவருமே நம்மைப் புத்திசாலிகளாக நினைப்பதுதான். நமது முன்னோர்களிடம் இது வழக்கத்தில் இருந்ததா என்று தெரியவில்லை. ஏனென்றால், அப்போது உடல் உழைப்புக்குத்தான் மதிப்பு அதிகம். அதனால், யாரும் அறிவுக்கூர்மையைப் பெரிதாக எண்ணவில்லை. அதிலிருந்து விலகி மூளை உழைப்புக்குச் சமூகம் மதிப்பளிக்கத் தொடங்கியபோது, முட்டாள் என்ற சொல்லுக்கு வலிமை அதிகமானது.
முன்பு, வில்லை வளைத்தவருக்கும் காளையை அடக்கியவருக்கும் பெண் தந்தார்கள். இன்று, ஐடியில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறாரோ, அவருக்குப் பெண் தருகிறார்கள். முன்பு பலசாலியைக் கொண்டாடினார்கள். இன்று நாம் புத்திசாலியைக் கொண்டாடுகிறோம். கள்ளம், கபடம் போன்ற குணங்களோடு சூத்திரதாரியாக இருப்பவரைக் கொண்டாடும் காலமும் வரக்கூடும்.

மூளை வளர்ச்சியற்றவர்கள் 1950-60களில் சாதாரண பள்ளிகளிலேயே படித்துத் தேர்ச்சி பெற்றனர். தற்போது, அப்படிப்பட்ட குழந்தைகளைச் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
நம் அறிவுத் திறனைச் சார்ந்துதான் பொருளாதாரத் தேடலும் சமூக அந்தஸ்தும் நிர்ணயிக்கப்படும் எனும்போது, அறிவில்லாதவர்கள் என்று சிலர் வகைப்படுத்தப்படுகின்றனர். பிழைக்கத் தெரியாதவர்கள், ஒன்றுமறியாதவர்கள், வெற்று வேட்டு என்று விதவிதமான பெயர்களால் முத்திரைக் குத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் மனம் நொந்து குடிகாரர்களாகவும், மனநோயாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகின்றனர்.
முட்டாள் தினம் என்பது ஒரு கொண்டாட்டம். முட்டாள் தினத்தன்று, ஒருவரை முட்டாள் ஆக்கிவிட்டோம் என்று நினைப்பது ஆபத்தானதல்ல. ஆனால், மற்ற தினங்களிலும் மற்றவர்களை முட்டாளாக்க வேண்டுமென்று நினைப்பது ஆபத்தானது. முக்கியமாக, சில மனிதர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவதில் அதிக ஆர்வம்காட்டுவார்கள்; அதைச் செய்தால் மட்டுமே, அவர்கள் நிம்மதியடைவார்கள். இத்தகைய Narcisstic Personality இருப்பது அபாயகரமானது.
இவர்கள், தன்னைத்தானே ரசிப்பார்கள்; தன்னைவிட புத்திசாலி உலகிலேயே இல்லை என்று நினைத்துக்கொள்வார்கள்; புத்திக்கூர்மை அதிகமுள்ளவர்களாக இருந்தால், சுற்றியிருப்பவர்களை முட்டாள் ஆக்குகிறோம் என்று வெளியே தெரியாத வகையில் அதைச் செயல்படுத்துவார்கள். ஒரு சில அரசியல் தலைவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை முட்டாள்களாக நினைப்பது இந்த ரகம்தான்.
அறிவியல்பூர்வமாக ஒருவரை முட்டாள் ஆக்குதல் என்பது ஒருநாளில் கட்டமைக்கப்படும் விஷயமல்ல. பல ஆண்டுகளாக மனதில் உருவாக்கி வளர்த்தெடுத்த சதித்திட்டமாக இருக்கும். முட்டாள் ஆக்கப்படுவது என்பது உலகளாவிய பிரச்சினை.
ஃபேஸ்புக்கிலும் கூகுளிலும் இன்று பலரும் நம்மை முட்டாள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமலேயே, பல அறிவுஜீவிகள் சமூக வலைதளங்களில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். Psycho social behavioral algorithm என்பதை தனியாக உருவாக்கி, அதன் மூலமாகச் சமூக வலைதளங்களில் இருப்பவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இன்று நடந்துவருகிறது. சமீபத்தில் நடந்த ஃபேஸ்புக் தகவல் திருட்டு சர்ச்சை இந்த ரகம்தான். இதன் மூலமாக, உங்களுக்கு யாரை, எதைப் பிடிக்க வைக்கலாம் என்பது, இன்னொருவரால் அறிவியல்பூர்வமாகத் திட்டமிடப்படுகிறது. அரசியல் தேடல் முதல் அந்தரங்க ஆசைகள்வரை இதில் உண்டு.
நமது முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி, நம் செயல்பாடுகளையே முற்றிலுமாக முடக்குவது அல்லது வேறு திசையில் திருப்பும் வேலை இது. அதேபோல, சந்திரனில் முதலில் கால் வைத்தது யார் என்ற விவாதம் இப்போது வரை நடக்கிறது. இந்த விஷயத்தில் ஒரு நாடே மற்ற நாடுகள் அனைத்தையும் முட்டாள் ஆக்கியதாகச் சொல்கின்றனர் சிலர்.
முட்டாள்தனத்துக்குச் சிகிச்சை பெற வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒருவர் திரும்பத் திரும்ப முட்டாள்தனமாகச் செயல்படுகிறார் என்றால், அவர் மனநல சிகிச்சைக்கு உட்படுவது நலம். இயல்பு தவிர வேறு காரணங்கள் இருந்தால், இதன் மூலமாகச் சரிசெய்யப்படும் வாய்ப்புள்ளது.
எது முட்டாள்தனம் என்பதை, இன்றைய உலகில் யாராலும் வரையறுக்க இயலாது. ஏனென்றால், ஒருவரது அறிவார்ந்த பார்வைகூட இன்னொருவரால் முட்டாள்தனமாகக் கருதப்படலாம். தான் நினைப்பது அனைத்தும் சரி என்று நினைப்பவன் முட்டாள். நான் நினைப்பது ஏன் சரியாக இருக்கக் கூடாது என்று கேள்விக்குப் பதில் காண முயல்பவன் புத்திசாலி.
நாம் புத்திசாலியாக இருக்கிறோமா அல்லது முட்டாளாக இருக்கிறோமா?
இந்தக் கேள்விக்குப் பதில் காணும் வரை மற்றவரை முட்டாளாகக் கருதாமல் இருப்பது உத்தமம்.

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.
டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.



Thursday, 14 December 2017

Manam yennum mayakkannadi (Tamil Article No.8)

மனம் என்னும் மாயக்கண்ணாடி- 8

பார்கவி. பார்க்க மிக அமைதியாக இருந்தாள். இரண்டு கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அவளின் மவுனத்திற்கும் வார்த்தைக்கும் இடையில் குற்றவுணர்வு ஒளிந்திருந்தது. அது கணவன் அல்லாத வேறு ஆணோடு அவளுக்கு இருந்த உறவு சம்பந்தப்பட்டது அந்தக் குற்றவுணர்வு.
பார்கவிக்கும் அசோகனுக்கும் கல்யாணமானதிலிருந்தே அவர்களிடையில் சரியான இணக்கமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவனது குடிப்பழக்கம் தான். ஆரம்பத்தில் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தவன் பின் அதிகமாக அதற்கு அடிமையானான். அது எங்கு எதிரொலித்தது என்றால் அவனது தாம்பத்ய வாழ்வில் எதிரொலித்தது. அவனால் அவளை திருப்திப்படுத்த இயலவில்லை. சில போதை பொருட்களையும் அசோகன் உட்கொள்வது உண்டு. குடியின் மிகக் கொடிய தாக்கம் இதுவாகவே பெரும்பாலும் இருக்கிறது. அவ்வளவாக உரையாடப்படாத பகுதியாகவும் உள்ளது.
பார்கவி அதை சமன்படுத்தும் முயற்சிகளை எடுப்பாள். அவளாகவே அவனுக்கு அழைப்பு விடுத்தும் அவனால் அவளை எந்தநிலையிலும் திருப்திப்படுத்த இயலவில்லை. அதை சமாளிக்கும் பொருட்டு அவன் அவளை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி நடந்து கொள்வதுண்டு. அதனாலேயே தனக்குள்ளாகவே அவள் தனது பாலியல் வேட்கையை மறைத்து வைத்துக் கொண்டிருந்தாள். பதிமூன்று வருடங்கள். இடையில் ஒரு குழந்தையும் வேறு.
பின் மெல்ல மெல்ல அது எதிர் தெரு நபருடனான உறவாய் மாறிற்று. முதல் முறையாக அவளது பாலியியல் வறட்சியில் மழை பெய்தது. முதல் ஆறுமாதங்கள் அதை முழுமனதாக அனுபவித்தாள். ஆனால், அதற்குப் பிறகாக அவள் அதை குற்றமாகப் பார்க்க ஆரம்பித்தாள். அவ்வூரிலிருந்து வெளிவர வேண்டுமென விரும்பினாள். குற்றவுணர்வே அவளுக்கு மிக மோசமான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் அலைப்பாய்கிறாள் பார்கவி.
பாலியியல் வேட்கை, அதில் இணைந்திருக்கும் குற்றவுணர்வு, அதை வேறு நபரிடம் தோன்றினால் ஏற்படும் கூடுதல் குற்றவுணர்வு எல்லாமே சமூகம் நமக்கு முன் ஏற்படுத்தியிருக்கும் ஏமாற்று வேலை தான். பல பெண்களால் தங்கள் பாலியியல் வேட்கையையோ பாலியியல் தேடலையோ இச்சமூகத்தில் வெளிப்படுத்தக் கூட முடியாது. கற்பு என்பதே அந்த ஏமாற்று வார்த்தையாக இருக்கிறது.

பார்கவி தயங்கி சொன்ன விஷயம் இதுதான். என்னுடைய பாலியல் தேவைகள் என் வாழ்வில் பூர்த்தி ஆனதேயில்லை. நம் கலாசாரத்தில் மிகுந்த பரப்பரப்பாக பேசப்படும் விஷயம் கற்பு. குறிப்பாக, பெண்களைப் பற்றி பேசும் போது இவ்விஷயத்தை மிக கவனமாக கையிலெடுப்பார்கள். கன்னித்தன்மை என்னும் வார்த்தை கற்பு அரசியலில் மிக நுட்பமான கூறுகள் கொண்ட ஒரு வார்த்தையாகும். கன்னித்திரை என்பது அவர்கள் கோட்பாடுகளில் ஒரு பெண்ணிற்கு கணவனால் மட்டுமே கத்தரிக்க வேண்டிய கத்திரிக்கோல்.
வாழ்வின் பெரும் சவால்களில் ஆனால் கன்னித் திரை என கூறப்படுவது பெண் சைக்கிள் ஓட்டினால் கூட கிழிந்து தான் போகும். என் தோழியின் முதலிரவில் உடலுறவுக்குப் பின் அவள் கணவன் போர்வையில் ரத்தம் தேடிய கதையை அவள் இன்னமும் உரக்க சொல்லி சிரிப்பாள். பெண்களை இதை முன்வைத்தே கற்புக்கரசி என்றும் வீட்டின் கன்னி தெய்வம் என்றெல்லாம் அடையாளப்படுத்தி கொண்டாடுகிறார்கள். பூஜை கூட செய்கிறார்கள். பல சாமியார்கள் பரிகாரமாய் கன்னித் தெய்வத்திற்கு படையல் வைங்க என்று சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்.
மருத்துவரீதியாகவே ஒரு பெண்ணை ஒரு ஆண் உடல்ரீதியாக அணுகுவது மற்றும் திருப்தியளிப்பது என்பது மிக சிரமமான விஷயம். ஒரு ஆணால் மூன்று நிமிடங்களுள் உச்சம் அடைய முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு உச்சநிலையை எட்டுவதென்பதற்கு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த ரீதியில் அணுகினோம் என்றால் பெரும்பாலான ஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியாது. அப்படி நேரும் போது பிற உறவுகளில் ஈடுபட நேர்கிறது. இதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருதரப்பிலும் நியாயங்களை வைக்கும் அளவிற்கே இவ்விஷயங்கள் குறித்த சமூக புரிதல் உள்ளது . இது துரதிஷ்டமே.
ஒரு ஆணால் இன்னொரு பெண்ணை வெகு சுலபமாக தன் வாழ்வில் சேர்த்துக் கொள்ள இயலும். ஆனால், ஒரு பெண்ணால் அது சுலபமாக இயலாது. அவளது தனிமையிலும் பெருமூச்சிலும் தான் அவளின் வெற்றிடங்கள் கரைந்து போகும். அந்நோன்யத்திற்கான பசி ( hunger for intimacy ) என்று அது அழைக்கப்படுகிறது. பைபிளில் பத்து கட்டளைகளில் பிறன் மனையை நினைக்காதே என்று இருக்கிறது. ஆனால், யதார்த்த வாழ்வில் அப்படியொரு சூழலை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு பக்கம் அப்படி முதன்மை உறவில் திருப்தியடையாத ஆணோ பெண்ணோ வேறு உறவுகளில் ஈடுபடுவது இயற்கையே. ஆனால், சமூக நிர்பந்தங்களினால் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்குக் கூட ஒழுக்கவரையுறுகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பார்கவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்த சிகிச்சையே அவளை குற்றவுணர்விலிருந்து மீட்பதே ஆகும். முக்கியமாக புராண கதைகளில் ஆண்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை புரிய வைப்பதிலிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் அது. உடல் என்பது அருவெருப்பானது என்ற சமூகத்தின் பெரும் தீ ர்மானத்தை தொடர் உரையாடல்கள் மூலமே தீர்க்க முடியும். அல்லது தீர்வை நோக்கி நகர முடியும்.
விவாகரத்து செய்து கூட தனக்கு வேண்டிய வாழ்வை நம்மில் பலர் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், குழந்தைகள் பாதிக்கப்படுமே என்பதால் அதை செய்ய மறுக்கும் பலர் தங்கள் மன தாபங்களை, அந்நோன்யத்தை ரகசிய உறவுகளின் மூலம் தீர்த்துக் கொள்கின்றனர்.
சரி தவறு என்னும் துலாபாரம் அற்றதாகவே உறவு சிக்கல்கள் உள்ளன. பார்கவியைப் போல இன்றுபல ஆண்கள் பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களை பெரும் குற்றம் இழைத்ததாக இந்த சமூகம் பார்ப்பது தான் இந்த சமூகத்தின் பிழை. உடல் குறித்த புரிதல் என்பது ஏற்படும் வரை இந்த சிக்கல்களோடே தான் மனித இனம் நகரும். அச்சிக்கலை மனச்சிக்கலாக்கி அழுத்தங்கள் கொடுக்கும்.

Dr. Sunil Kumar                                       Dr. jayasudha kamaraj
Clinical Psychologist                                Counseling Psychologist
Founder - Mind Zone                                co-founder, Mind Zone

Manam Yennum mayakkannadi (Tamil Article No. 10)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 10

முருகனை மனநல பாதுகாப்பகத்துக்கு அழைத்து வந்ததன் நோக்கமே அவன் வெளியே இருந்தால் யாராவது அவனைக் கொலை செய்துவிடுவார்கள் என்பதே ஆகும். எந்தவிதமான கொலை வழக்கும் அவன்மீது இல்லை. ஆனால், அவனுக்குக் கஞ்சா மற்றும் குடிப் பழக்கங்கள் இருந்தன.
முருகனின் மேல் நாற்பத்தைந்து வழக்குகள் உள்ளன. இதில் செயின் பறிப்பு வழக்குகள் அதிகம். இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் அவன் நண்பர்களும் நண்பர்களோடான பழக்கமும்தான். முருகனின் அப்பா ஒரு கவுன்சிலர். அம்மா வேலைக்குப் போகவில்லை. ஒரே தங்கை. நண்பர்களோடான பழக்கம் கஞ்சா பழக்கத்துக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறான். சிறு வயதிலிருந்தே யார் பேச்சையும் கேட்காமல் வளர்கிறான்.
முருகன் யார் என்று யோசித்தால் அது ஹாசினியையும் தன் சொந்த அம்மாவையும் கொலை செய்த தஸ்வந்த் போன்ற ஒருவன்தான். இவ்வகையான மனநிலைக்குப் பெயர், சமூக விரோத எதிர் குணாதிசயம். இதை வலியுறுத்த பெரும் ஆராய்ச்சிகள் நடைப்பெறாத போதிலே ஒரு குற்றவாளியின் மூளையைப் பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது அவனது மூளை மற்ற சாதாரண மனிதர்களின் மூளையைக் காட்டிலும் வித்தியாசப்படுவதை மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதிலிருந்தேதான் குற்றவாளிகள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா என்ற பட்டிமன்றமே உருவானது.
அதன் பிறகுதான் குற்றம் என்பதே மரபணுக்களால் ஏற்படும் பாதிப்பு என்னும் வாதம் உருவாயிற்று. அதாவது ஒரு குற்றவாளியின் மகன் குற்றவாளியாகவே இருப்பான், ஒரு வாத்தியாரின் மகன் வாத்தியாராகவே இருப்பான் என்னும் நம்பிக்கை சார்ந்த புரிதல் பேசப்பட்டது. இது எதுவுமே தீர்மானமான ஒரு முடிவைத் தரவில்லை என்பதே உண்மை. ஒரு வாத்தியாரின் குழந்தை குற்றவாளியாகச் சமூகத்தின் முன் நின்ற போதான நொடியில் இந்தத் தீர்மானமின்மை கிளைவிட்டது.

இப்படி மூளை நோயியல் அல்லது மரபணுவால் ஏற்படும் பாதிப்புகள் மருத்துவ ரீதியாக ஒரு செயற்பாட்டு காரணத்தைக் கொடுப்பதால் பொதுவான ஒரு தீர்மானமே கிட்டியதால் மூளையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடந்தன. அதில் மூளையிலிருக்கும் ஒரு பகுதி நம் மனத்தூண்டுதலைக் கையாள்கிறது என்பது குறிக்கப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சமூகக் குடும்ப மன சூழல் காரணமாக இந்த தூண்டப்படும் புள்ளி வேறுபடுவதாகச் சொன்னார்கள். ஒரு கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்லும் செய்கைகூட இத்தகைய தூண்டுதலில் இருந்து கிளர்ந்தோடுவதுதான். இதுபோன்ற தூண்டுதல்கள் மிதமிஞ்சிப் போகும்போது அது சமூக விரோத எதிர் குணாதிசயம்.
முருகனைப் போலவே சிறுவயதிலிருந்தே யார் சொல்வதையும் எதையும் கேட்க மறுக்கும் தூண்டுதல் மனோபாவம்தான் பிற்காலத்தில் இந்தச் சமூக விரோத குணாதிசயத்தை அதிகரிக்க வைக்கிறது என்பதே அடிப்படையான புரிதலாகவும் தீர்மானமாகவும் கொள்ளப்பட்டது
இதன் நீட்சியாக ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றவாளியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. வீடற்றவர்கள், சிறுவயதில் வன்முறையைப் பார்த்தவர்கள், சிறு வயதில் உடல் வன்முறையை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய உளவியல் ரீதியிலான தூண்டுதலுக்கு உள்ளாவதுண்டு. அதுவே சமூக விரோத குணாதிசயத்தைத் தூண்டுகிறது. ஏன் வன்முறை செலுத்தப்பட்டவர் வன்முறையாளராக ஆகிறார் என்றால் அதற்கான காரணம் உடல் அதிகாரத்தால் கிடைக்கும் சக்தியை எதிர்மறையாக அனுபவித்திருக்கிறார் என்பதால் மட்டுமல்ல. இந்தச் சமூகத்தையே அவர் பழி தீர்த்துக்கொள்ளும் செயலாக நினைக்கிறார் என்பதே உண்மை.

எப்போது தனக்கு அங்கு ஒரு பாதுகாப்பு ,அங்கீகாரம் இல்லை என்று உணர்கிறார்களோ, அப்போது அவர்கள் யார் மீது அதிகாரத்தை, வன்முறையை செலுத்துகிறார்களோ அவர்கள் சமூகமாகக் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இதுதான் ஒரு பொத்தாம் பொதுவான தீர்மானங்களை இயற்றுகிறது. இஸ்லாமியர்கள் மீதான சமூக விரோத கண்ணோட்டம் இங்கிருந்து கிளை விடுவதுதான். இப்படி மன அரசியலின் பின்புலத்தில் உலகலாளவிய அளவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இனத்தை ஒடுக்கப்படும் முயற்சிகள் நிகழ்கிறது.
ஒடுக்கப்பட்டோர் குற்றவாளியாக இருப்பார்கள் என்னும் நிலைப்பாடு எப்படி உண்மையாக இருக்க முடியும். ராயபுரத்தில் பட்டாக்கத்தி எடுத்து வெட்டுபவனும் மயிலாப்பூரில் கம்ப்யூட்டர் ஹேக் செய்பவனும் சம பங்கு குற்றவாளிதான்.
முருகனைப் போல் இவ்வகைக் குற்றவாளிகளின் சமூக விரோதத்தன்மை சிறுவயதிலிருந்தே சில சில அறிகுறிகளாகத் தெரியும். பின் பதின்ம வயதில் பள்ளிக்குப் போகாமல் இருப்பது, சினிமாவுக்குப் போவது, சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுதன் மூலம் இந்த குணாதிசயம் வேர் ஊன்றும். சிறு வயதில் இதை நடத்தை சீர்குலைவு என்று சொல்வோம். இது வளர வளர சமூக விரோதத் தன்மையாக மாறுகிறது. ஒரு குழந்தை எதிர்வினையாக செயல்பட்டால் அதை முதலிலேயே மனநல ஆலோசகர்களிடம் கூட்டி வந்திருக்க வேண்டும். அதற்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இந்த மலை விழுங்கும் குணாதிசயத்துக்கு இரையாகிவிட வேண்டியது தான்.
பச்சாதாபம் அவர்களுக்குச் சுத்தமாக இருக்காது. அதேநேரம் தன்னிச்சையாய் தூண்டப்பட்டு சிறிதும் யோசிக்காமல் காரியங்கள் செய்வார்கள். முருகனும் அப்படியே போதைக்காகவும் ஜாலியான வாழ்வு என்று அவன் நினைத்திருக்கும் வாழ்வுக்காகவும் பின் விளைவுகளைச் சற்றும் யோசிக்காமல் திருட ஆரம்பித்தான். எப்போதும் திமிராகவே நடந்து கொள்வான். எந்தச் சட்ட திட்டமும் அவனுக்கோ அவன் வாழ்வுக்கோ இல்லை. யாருக்காகவும் மனம் இரங்கும் தன்மையிராது. பணத்துக்காக மட்டும் கேட்பது போல நடித்துவிட்டு பின் மனம் மாறுபவர்கள். எல்லாமே உடனே நிகழணும். ஒரே பாட்டில் அம்பானி ஆகணும் கதையாக தான் முருகனுக்கு இருந்திருக்கிறது.
நம் சமூகத்தின் அவலமே இப்படியான தனிமனித மன குணாதிசயங்களை அவனிருக்கும் இடம் வைத்தோ, சாதி, மதம் வைத்தோ பொதுப்படையாக பேசுவதன் மூலம் அந்த இடம், சாதி, மதம் குறித்த அடையாளம் ஒன்றை முத்திரையிடுவதுதான். அது போலவே இவர்களின் இத்தன்மையைச் சுய அரசியல் லாபங்களுக்காக குடும்பங்களிலும் அதேநேரம் சமூகத்திலும் பயன்படுத்தி அதிகாரங்களைத் தனக்குரியதாக்கிவிட்டு பின் இவர்களை மட்டும் சமூக விரோதிகளாக அடையாளம்காட்டி இவர்களை அழிப்பதும் சமூகம்தான். ஆக, இவர்களை உருவாக்குவதும் அழிப்பதும் சமூகம்தான். இந்தச் சமூக உளவியல் சிக்கலை ஆராய்ந்தோமானால் நமக்குப் புரிபடும் முக்கியமான விஷயம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஒடுக்குமுறைகளும் பொருளாதார ஏற்றதாழ்வுகளுமேதான்.
எங்கு, எப்போது நீதி தன் கடமையைச் செய்யவில்லையோ அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து இப்படி ஒரு சமூக விரோத எதிர் பிரதிநிதித்துவம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, முருகன் என்பவன் முருகன் மட்டுமல்ல; முருகனுக்கான சிகிச்சை என்பது முருகனுக்கானது மட்டுமல்ல; இந்த சமூகத்துக்கானதாக இருக்க வேண்டாம். ஒட்டுமொத்த சமூகத்தின் உலவியல் தன்னிச்சை செயல்பாடுகளிலும் ஒற்றை மனிதனை சிகிச்சைக்கு உட்படுத்துவதால் உடனடியாக மாறிவிடாது. இது ஒரு சமூக மாற்றத்தின் பிம்பமாக மட்டுமே பிரதிபலிக்க வேண்டியது.

நம் கல்வி திட்டங்களில் மாற்றங்கள், காவல் துறையில், பள்ளி ஆசிரியர்களில் உணர்திறனை கூராக்குவதன் மூலமே இது சாத்தியப்படும். நீதித் துறையும் இதில் உள்ளடக்கமே. சிறை என்பதன் அர்த்தம் குற்றவாளி மனம் மாறுவதுதான். ஆனால், அந்த மாற்றம் நிகழ்வதற்கான மாற்றம் எதுவுமே நிகழ்த்தப்படவில்லை. சிறையும் மனநல காப்பகங்களும் அதனால் ஒன்றாகவே இருக்கிறது. சமூகத்தால் சமாளிக்க இயலாதவர்களின் கூடாரமாகவே இவை அமைந்திருக்கிறது. சிக்கல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதைக் கண்டறியாமலே ஓர் உதிரி சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மேலும் சிக்கலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.
முருகனைப் போல சமூக விரோத குணாதிசயம் கொண்ட மனிதர்களால்தான் பெண்களுக்கு உடல் வன்முறையும் நிகழ்கிறது. அவர்களின் காம உணர்வு இடம், பொருள், பின் விளைவு எதையுமே பார்ப்பதில்லை.
முருகனை மொத்தம் ஆறு பள்ளிகளில் வெவ்வேறு பிரச்னைகளால் மாற்றியிருப்பதாகச் சொல்கிறார் அவர் அப்பா. அப்போதே முருகனுக்கு மனநல உதவி தேவைப்பட்டிருக்கிறது, அத்தகைய சிறு வயது கண்டுணர்தலும் ஆலோசனையும் முருகனை மீட்டிருக்கக் கூடும். முருகன் அதன்பின் வீட்டுக்கு வராமலும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமலும் நாள்கள் நகர்ந்தன. அவனை வேறு சிலர் கொலை செய்ய முயற்சிக்கும்போதே அவன் குடும்பத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது.
ஹாசினியைக் கொன்றவனின் நிலமையும் இதுதான். ஹாசினியைக் கொன்றபோது அவனை ஜாமீனில் எடுக்க வீட்டையெல்லாம் விற்ற அவன் அம்மா அப்பாவையே கொலை செய்ய எண்ணும் அவனது சமூக விரோத மனம் தன்னிச்சை செயல்பாடுகளால் உந்தித் தள்ளப்பட்டதே. அதற்கு நன்றி பாராட்டுதலோ, மனித மாண்புகளோ கிடையாது. இக்குணாதிசயமே சமூக அநீதிகளுக்குட்படும்போது சமூக விரோத செயல்களாக உருவெடுக்கிறது.
ஆக, முருகனை சிகிச்சையின்பேரில் அவனது தன்னிச்சையான உணர்வை கோர்வைப்படுத்த முயல்வதே அவனை மீட்கும் முயற்சி. ஆனால், அது நூறு சதவிகித வெற்றியாகுமா என்பதை உறுதியளிக்க முடியாது. தன்னிச்சை கட்டுப்பாட்டுக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுவதன் மூலம் மாற்றத்துக்கான முயற்சியை மேற்கொள்ளலாம். சமூகத்தின் நேர்மையற்ற ஏற்றதாழ்வுகளை சரி செய்தாலன்றி நம்மில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான முருகன்கள் மனநலத்துடன் இருப்பது சிரமமே.

Dr. Sunil Kumar                                                  Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                           Counseling Psychologist
Founder - Mind Zone                                           Co-founder, Mind Zone

Wednesday, 6 December 2017

Manam Yennum Mayakkannai - Part - 9 (Article in Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 9

விஸ்வநாதனைச் சந்தித்த முதல் நொடி அவரின் கூச்ச சுவாபம்தான் என் கண்ணிலும் புத்தியிலும் உடனடியாக அவரைப் பற்றி பதிந்த அபிப்பிராயங்கள். விஸ்வம் ஒரு கோயில் பூசாரி. மிகவும் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து குலப்பெருமையைக் காப்பதே வாழ்க்கை என்று நினைக்கும் ஒருவராகவே விஸ்வம் இருந்திருக்கிறார். பதின்ம வயது சுய கட்டுப்பாட்டு கோட்பாடுகளில் ஒன்றாக அவருக்குப் பெண்கள் மீது எந்தவித பாலியல் ஈடுபாடும் வந்துவிடக் கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்று.
அதன்படியே அவரது வாழ்க்கையும் நகர்ந்தது. பெண்பால் ஏற்படும் இயற்கையான ஈடுபாடு தவறு என்றே நினைக்கிறார். விரும்பியபடியே கோயில் பூசாரியாக ஆகிறார். அதன்பிறகு, வாழ்க்கை நன்றாக தான் போகிறது. வாழ்க்கையில் கச்சிதமான வழிநெறிகள் தவறாத மனிதராக (பர்ஃபெக்ஷ்னிஸ்டாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். யார் மனதையும் எந்தக் காலகட்டத்திலும் காயப்படுத்தக் கூடாது. அதேபோல் எந்த பெண்ணையாவது பார்த்தது யாருக்காவது தெரிந்து விட்டால் அது தனக்கும் தன் குலத்துக்கும் அவமானம் என நினைத்தார்.
என்ன தான் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் நம்மை ஆள செய்தாலும் மனம் என்பது தன் போக்கில் இயற்கை உந்துதலின் வழியே செல்லும். அந்த வயதிற்கு இயல்பாக இருக்கக் கூடிய இச்சைகளை மனதும் உடலும் நிராகரிக்காது. அப்படி நிராகரித்து விட்டதாக சொல்வது போலியானது. ஆனால், சமூகம் கட்டமைத்த போலியான கோட்பாடுகளாலும் உடல் என்பதை அசிங்கத்தின் தொடர்ச்சியாக பார்க்கும் மனநிலையின் நீட்சியாகவும் நம் போலிகளையே நிஜமென நம்புகிறோம். அப்படியான மனநிலைக்குத்தான் விஸ்வமும் தள்ளப்பட்டார்.

எப்போது இதுபோன்ற உணர்வுகளை அடக்கி வைத்தோ, மறுதலித்தோ வாழ்ந்தால் அது தன் இயற்கையான வழியை தானே கண்டடையும். இது தான் நியதி. இப்போது தான் விஸ்வத்துக்கு தன் நடவடிக்கை குறித்து நிறைய கேள்விகள் வந்தன. அடிக்கடி குளிக்க ஆரம்பித்தார். அவர் குளித்து கிளம்பி பாதி தூரம் கோயிலுக்குப் போகும் பாதையில் பின்பு திரும்ப வீட்டுக்கு வந்து மீண்டும் குளித்து கிளம்புவார். குளிப்பதும் நாம் ஒற்றை வார்த்தையில் சொல்வது போல சாதாரணக் குளியல் இல்லை. சோப்பைப் போட்டு தேய்த்து, பின் தேய்த்து தேய்த்து, தேய்த்தான குளியல். அவரது தோலே நிறம் மாறி போகும் அளவுக்கான குளியல் அது. அப்போது தான் தனக்கு மனநல ஆதரவு தேவை என்று கருதி சிகிச்சை எடுக்க முன்வருகிறார்.
மனநல மருத்துவர்களிடம் தன் நிலையை சொல்பவரால் எல்லாமே மனம்விட்டு சொல்ல முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அது குறித்த அவரது கோட்பாட்டு விழுமியங்கள் வேறாக இருந்தன. பேசப் பேசவே தன் மனதின் இடுக்குகளில் சிக்கிக்கிடந்த ரகசியத்தை பகிர்கிறார். அதன்படி அவருக்கு அம்பாளின் மேல் பெரும் பிரேமம் இருக்கிறது. அம்பாளுக்கு உடை மாற்றும்போதும் பூஜைக்கு தயார் செய்யும் போதும் இந்த நினைவு கசடாய் வந்து நிற்க அவரால் தான் கறைப்பட்டு விட்டோம் என்ற நினைவை தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதன் காரணமே அவர் அடிக்கடி குளிக்க ஆரம்பிப்பது. பூலோகப் பெண்களையே நினைத்து பார்க்கக் கூடாதென நினைக்கும் என்னை இப்படி அம்பாளையே தவறாய் நினைக்கும் அளவுக்குக் கொண்டு வந்தது என்ன? எது என்னை இந்த தீய எண்ணத்திலிருந்து மீட்கும்? எது என்னை புனிதப்படுத்தும் என்ற சுயபோராட்டத்தின் விடையே அந்த குளியல்.
நம் சமூகத்தில் பொதுவாகவே கச்சிதமாக வாழ்பவர்களாக இருப்பவர்கள் எல்லாமே அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். கச்சிதம் என்று ஒன்றும் இல்லை. அதை யார் நிர்ணயிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் கோட்பாடுகள் அமையும். அது சாதி, மதம் பிராந்தியம் சமபந்தமான நீட்சிகள் உடையது. அதன்படி வாழ்வதென்பது உலகப்பிராகரமாக முடியாத காரியம். அதனால் யதார்த்த வாழ்வில் முரண்பட்டு இக்கச்சிதங்கள் சிதையும்போது மனச்சிதைவும் அழுத்தங்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருகின்றன. மன அழுத்தம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனதையும் உடலையும் அழிக்க கூடிய விஷயமே கச்சித தன்மை என்பது ஓர் உன்னதம் இல்லை. அது ஒரு குறைபாடே. அதேபோல் அது ஒரு நோயாகவும் மாறும் வாய்ப்பு அதிகம். காரணம், நாம் அப்பழுக்கற்ற வாழ்வியல் முறையை கடைப்பிடிக்கும்போது மற்றவர்களின் குறைகள் அதிகமாக தெரிய வருகின்றன. அதன் பொருட்டே நாமும் குறைகளற்ற கச்சிதமான மனிதர்களாக இருக்க வேண்டிய நிர்பந்தமும் அதிகமாகிறது.

அப்படி யதார்த்த வாழ்வில் இருக்கவிடாமல் செய்யும்போது மிக அதிகமான மனசிக்கல்கள் ஏற்பட்டு எண்ண சுழற்சி நோய்க்கு (obsessive compulsive disorder) ஆளாகிறார்கள். விஸ்வத்துக்கும் இதே பிரச்னை தான்.
அம்பாளுடன் தனக்கு இப்படியான எண்ணங்கள் வருவதே தன்னாலேயே சகித்துக்கொள்ள முடியாத சூழலில் மீண்டும் மீண்டும் குளித்து அவரால் கோயில் வேலைகளிலேயே ஈடுபட முடியாமல் போய் விட்டது. எண்ண சுழற்சி நோயை மனித மனதால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இடையூறு செய்யும் எண்ணங்களை அது தொடர்ச்சியாக ஏற்படுத்திய வண்ணமே இருக்கும். நோயாளியின் அன்றாட வாழ்வியியலே பாதிக்கப்படும் என்பது விஸ்வத்தின் வாழ்வை முன்வைத்தே புரிந்து கொள்ளக் கூடியது. ஷேக்ஸ்பியரின் ‘லேடி மேக்பத்’ கையில் ரத்தக் கறை இருப்பது போல் புலம்பிக்கொண்டு கைகளை கழுவிக்கொண்டே ‘அரேபிய நறுமணப் பொருட்களும் என்னை மீட்காது’ என்று சொல்வதன் அடையாளமும் இந்த நோயே..
இது அபத்தம் என்று தோன்றினாலும் அவர்களால் அதை விட்டொழிக்க முடியாது. சில விஷயங்களை அவர்கள் சடங்கு மாதிரி செய்வார்கள். பத்து தடவை சாமி கும்பிடுவது மாதிரியான விஷயங்கள் இதன் வெளிப்பாடே. யதார்த்தமான உடல் தேவைகளை புறந்தள்ளாமல் அதைப் புரிந்துக்கொண்டு கச்சிதங்களுள் சிக்காமல் வாழ்வதே மன அழுத்தங்களிலிருந்து தப்பிக்க வைக்கும்.
யாரையும், யார் வாழ்வையும் சில நேரம் துலாபாரக் கோல்களோடு நாம் மதீப்பீடு செய்ய முடியாது. ஆனால், நாம் நம் விழுமியங்களை முன் வைத்து அதை செய்தபடியே இருக்கிறோம். வாழ்வின் மிகப் பெரிய விடுதலையே கச்சிதமான விழுமியங்களிலிருந்து நாம் நம்மை விலக்கிக் கொள்வதே. அதை புரியவைத்த பிறகு விஸ்வமும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

Dr. Sunil Kumar                                                            Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                                     counselling psychologist
Founder- Mind Zone                                                      co-founder, Mind Zone
Call: 9444297058                                                           Call: 9176055660